18

siruppiddy

ஜனவரி 22, 2019

மைத்திரியின் பாதுகாப்பு வாகனத் தொடரணி விபத்தில் இருவர் ஸ்தலத்தில் பலி

முல்லைத்தீவு தட்டாமலைப்பகுதியில் 21.01.2019 மதியம் 1 மணியளவில் இராணுவ வாகனம் ஒன்று விபத்துக்களானதில் பலர் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.முல்லைத்தீவுக்கு ஜனாதிபதி இன்று வருகை தந்திருந்த நிலையில் அவரது பாதுகாப்பிற்காக சென்ற
 இராணுவ கோமாண்டோ படையணியே பாதுகாப்பு பணியை நிறைவு செய்து, வவுனியா பகுதி நோக்கி வருகைதந்தவேளை இவ்விபத்தில் சிக்கியுள்ளது.    தட்டாலை பகுதியில் உள்ள வளைவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்தே இந்த வாகனம் விபத்துக்காகியுள்ளதுடன், படுகாயமடைந்தவர்கள் உடனடியாக நோயாளர் காவு வண்டிகளில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.
எனினும், விபத்தில் காயம் இருயமடைந்தவர்களில் இருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் வைத்தியசாலை தகவல்கள் 
தெரிவிக்கின்றன
இங்கு அழுத்தவும் நில5வரை கொம் செய்தி >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக