18

siruppiddy

மார்ச் 20, 2020

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய வர்களை யாழில் தேடுதல் ஆரம்பிக்கப்படலாமாம்

கொரோனா பேரிடரை ஒட்டிய நடவடிக்கையாக வடக்கில் யாழ்ப்பாணத்தில் எந்த நேரத்திலும் இலங்கை படையினர் தேடுதல் வேட்டை ஒன்றை ஆரம்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த விடயம் 
பேசப்பட்டுள்ளதாக  தெரிவிப்பு 
அத்துடன், புத்தளம், நீர்கொழும்பு மாவட்டங்களில் ஊரடங்கை அறிவித்துப் படையினர் தேடுதல் நடவடிக்கையில்
 ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மையில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய சிலர் அந்த பகுதியில் இலங்கை படையினர் நடத்திய தேடுதலில் இருந்து தப்பித்து யாழ்ப்பாணத்தை ஒட்டிய பிரதேசத்தில் தங்கியிருப்பதாக அதிகாரிகள் தரப்பிற்கு சந்தேகம் உள்ளதாக தெரியவருகிறது.
அதையொட்டி யாழ்ப்பாணத்தில் சில சமயத்தில் எந்நேரத்திலும் சுற்றிவளைப்புத் தேடுதல் நடக்கலாம் எனத் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக