18

siruppiddy

ஏப்ரல் 29, 2018

ஆனந்தசுதாகரை விடுவிக்குக ஜனாதிபதியிடம் வேண்டுகோள்

புனித வெசாக் தினத்திலாவது ஆயுட்கால சிறைத்தண்டனை அரசியல் கைதியான ஆனந்தசுதாகருக்கு பொதுமன்னிப்பளித்து அவரை ஜனாதிபதி விடுதலை செய்ய வேண்டும் என கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் மனிதவள அபிவிருத்திகள் தொடர்பான நிலையியல் குழுத் தலைவருமான சி.பாஸ்கரா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இரக்க நல்லெண்ணத்தையும் மதக் கோட்பாட்டு நற்சிந்தனையாளன் என்பதையும் காட்ட வேண்டிய மிக முக்கியமான நாள் வெசாக் 
திருநாள் ஆகும்.
ஆயுட்கால சிறைத் தண்டனை அரசியல் கைதியான ஆனந்தசுதாகரின் மனைவி இறந்த பின்னர் அவரின் பிள்ளைகள் நிர்க்கதியாகி உள்ளனர்.
இந்த அவலநிலை இன, மத பேதமின்றி சகல இன மக்களாலும் பார்க்கப்பட்டுத் தாக்கத்தை உண்டு பண்ணியுள்ளது.
இவ்வேளையில் புத்த பகவானின் அருட் போதனைகளை கடைப்பிடிக்கும் இந்த நாட்டின் ஜனாதிபதி, புனித வெசாக் தினத்தில் அரசியல் கைதியான ஆனந்தசுதாகருக்கு பொதுமன்னிப்பளித்து அவரை விடுதலைசெய்ய வேண்டும் என்று தனது அறிக்கையில் 
தெரிவித்துள்ளார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஏப்ரல் 24, 2018

அரசர்கேணி பிரதேசத்தில் பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

கிளிநொச்சி பளைப் நகருக்கு அண்மித்த அரசர்கேணி பிரதேசத்தில் இவ் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறித்த காணி உரிமையாளர் காணியினை துப்பரவு செய்யும் பொழுது 
தொடர்ந்து சீமந்துக் கொங்கிறீட் தென்பட்டுள்ளது சந்தேகம் கொண்ட உரிமையாளர் அருகில் இருந்த இராணுவ முகாமிற்கு தகவல் வழங்கியதனை அடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற 
இராணுவத்தினர் குறித்த காணியில் இருப்பது விடுதைப்புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி என்பதனை உறுதி செய்துள்ளனர்.  குறித்த பதுங்கு குழியானது சுமார் 35 அல்லது 45 அடி நிலமட்டத்தில் இருந்து கீழ் செல்வதாக கூறப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஏப்ரல் 18, 2018

புதுக்குடியிருப்பில் இராணுவச் சிப்பாயிடம் கொதித்தெழுந்த யுவதி

இலங்கை இராணுவச் சிப்பாய் ஒருவருக்கும் தமிழ் யுவதி ஒருவருக்கும் இடையில் கடும் கருத்து மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த இராணுவச் சிப்பாய் ஒழுங்கு மாறாக நடந்துகொள்ள முற்பட்டதனாலேயே இந்த கருத்து மோதல் இடம்பெற்றுள்ளது.புதுக்குடியிருப்பில் உள்ள இலங்கை வங்கி ஏ.டி.எம் இயந்திர சேவையை பெற்றுக்கொள்ள மக்கள் சிலர் வரிசையில் காத்திருந்தனர்.இதன்போது குறித்த யுவதியும் 
மக்களோடு மக்களாக பின் வரிசையில் காத்திருந்துள்ளார். இந்த நிலையில் முன்வரிசையில் நின்ற மக்கள் தொகை குறைவடைய அடுத்ததாக யுவதியின் சந்தர்ப்பம் வந்தது. இதன்போது இராணுவச் சிப்பாய் ஒருவர் யுவதிக்கு குறுக்காக முந்திச் சென்று குறித்த இயந்திரத்தில் பணம்
 எடுத்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த யுவதி குறித்த இராணுவச் சிப்பாய் பணம் எடுத்துக்கொண்டு திரும்பியபோது “நாங்களும் இதுக்குதான் நிற்கின்றோம்” என்று அவரைப் பார்த்து கோவத்துடன் கூறியுள்ளார்
.இதனையடுத்து குறித்த இராணுவச் சிப்பாயும், “எனக்காக கொமாண்டர் காத்துள்ளார்” என்று தமிழில் பதிலளித்துள்ளார். இதற்கு பதிலளித்த யுவதி, “எனக்கும் எங்கள் கொமாண்டர் காத்திருக்கிறார்” என்று திடுமெனக் 
கூறியுள்ளார்.
இந்த நிலையில், குறித்த யுவதி யாரைக் கொமாண்டர் என்று கூறுகின்றார் என்று குழம்பிய இராணுவச் சிப்பாய் மேலும் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளார். இதன்பின்னர் அவ்விடத்தில் நின்ற ஏனையோரால் குறித்த கருத்து மோதல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




ஏப்ரல் 11, 2018

முல்லை தீவு க்கடலில் மர்மம்: இலங்கை விரைந்த அமெரிக்க குழு

வழக்கத்துக்கு மாறாக முல்லை தீவு கடலில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறதாம். முல்லைத்தீவு கடலில் தொடர்ந்து ஏற்படுகின்ற மாற்றம் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ள அமெரிக்கா குழு 
இலங்கை விரைந்துள்ளது. 
கடந்த ஆறு மாதங்களாக பல முறை முல்லை தீவு கடல் தன்மையில் மாற்றம் காணப்பட்டுள்ளது. நீர் மட்டம் திடீரென் ஐந்து அடி அதிகரித்ததாகவும், கடல் கொந்தளித்ததாகவும், கடல்
 நீர் நிறம் வித்தியாசமாக காணப்பட்டதாகவும் அங்கு இருக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், சுனாமி வரக்கூடுமோ என எண்ணி கடலிற்கு பூஜை நடத்தியுள்ளனர். அண்மையிலும், கடல் நீர் வீதிக்கு வருவதாக மக்கள் நகரத்தை விட்டு வெளயேறியுள்ளனர். 
இதனால், இலங்கையில் உள்ள ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் எந்த ஒரு காரணமும் கண்டுபிடிக்கப்படாததால், அமெரிக்காவில் இருந்து ஆய்வு குழு இலங்கைக்கு விரைந்துள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிப்ரவரி 27, 2018

இனம் தெரியாதோரால் தம்பலகாமத்தில் பஸ் வண்டி தீக்கிரை!!

திருகோணமலை – தம்பலகாமம், கிண்ணியா பிரதான வீதியின் பட்டிமேடு சந்தியில் பழுதடைந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் வண்டிக்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக தம்பலகாம பொலிஸார் தெரிவித்தனர்.இந்த பஸ் வண்டி முள்ளிப்பொத்தானை 97ஆம் கட்டையை சேர்ந்த சமிந்த என்பவருக்கு சொந்தமானது எனவும் தெரியவருகிறது.
பஸ் வண்டி முழுமையாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தம்பலகாம பொலிஸார் மேற்கொண்டு
 வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





இரு புதிய உறுப்பினர்கள் வட மாகாண சபையில் பதவியேற்பு

வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினர்களான எஸ்.எம்.எ. நியாஸ் மற்றும் சபாரட்ணம் குகதாஸ் ஆகியோர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதையடுத்து முன்முதலாக இன்று அவைக்கு 
வருகைதந்திருந்தனர்.
யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்தில் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் இன்று 117ஆவது அமர்வு ஆரம்பமாகியது.அதன்போது இரு உறுப்பினர்களும் அவைத் தலைவரினால் சபைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்
.வடமாகாண 
சபையின் உறுப்பினரான இம்மானுவேல் ஆர்னோல்டிற்குப் பதிலாக ரெலோ கட்சியின் உறுப்பினர் சபாரட்ணம் குகதாஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் றயிஸ் இராஜினாமா செய்து
 கொண்டதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிதாக எஸ்.எம்.எ. நியாஸ் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.இதனைத் தொடர்ந்து இருவரும் தமது கன்னியுரையினை 
சபையில் ஆற்றினார்கள்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிப்ரவரி 13, 2018

வெடித்த குண்டு முல்லைத்தீவு பிரதேசத்தில்

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் சில வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது என்று முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.
முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் குவிக்கப்பட்டிருந்த குப்பைக்குப் பிரதேச நபர் ஒருவர் தீ வைத்தபோது அதற்குள் இருந்த ஆர்.பி.ஜி ரக வெடிபொருள் வெடித்ததால் குப்பை மேட்டிலிருந்த சில கழிவுப் பொருள்கள் அருகிலுள்ள வீடுகள் மீது சிதறி வீழ்ந்திருக்கின்றன.
சில வீடுகளுக்கு சிறிதளவான பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக முல்லைத்தீவு பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த வெடிப்புச் சம்பவத்தால் எவருக்கும் எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
போருக்குப் பின்னர் முல்லைத்தீவுப் பகுதி.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>