18

siruppiddy

பிப்ரவரி 22, 2016

சிங்களவர்கள் தான் தலைவர் பிரபாகரனை உருவாக்கியது !

தமிழர்களுக்கான உரிமைகளை சிங்கள தேசம் வழங்கியிருந்தால் பிரபாகரனும் தோன்றியிருக்க மாட்டார். ஆயுதப் போராட்டங்களும் நடந்திருக்காது. இதனை சிங்கள தேசம் உணர்ந்து கொண்டு தனது செயற்பாடுகளை இனியாவது முன்னெடுக்க
 வேண்டும் என 
தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு சீர் திருத்தங்கள் தொடர்பில் பொது மக்களிடம் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கை நேற்று  யாழ் மாவட்டச் செயலகத்தில் இரண்டாவது நாளாகவும் நடைபெற்ற போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழிழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரணை உருவாக்கியது தமிழ் மக்கள் அல்ல. சிங்கள மக்களே இதற்கு நாட்டில் கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்த அரசியல் யாப்புக்களே 
காரணம் என 
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனூடாகவே நல்லாட்சியும் நல்லிணக்கமும் சமத்துவமும் ஏற்படலாம் என அரசியலமைப்பு சீர் திருத்தக் குழுவிடம் பொது மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கான உரிமைகள் வழங்கப்படாத அதே வேளை இருக்கின்ற சில உரிமைகளும் மறுக்கப்பட்டும் பறிக்கப்பட்டும் வந்திருக்கின்றதே வரலாறுகளாக இருக்கின்றன.
இதனாலேயே நாடு சுதந்திரம் அடைந்திருந்தாலும் எமக்கான சுதந்திரம் இன்று வரை கிடைக்காத நிலையில் இருக்கின்றோம். இவ்வாறு எமது உரிமைகள் மறுக்கப்பட்டு எமக்கு எதிராக அநீதிகள் இழைக்கப்பட்டுகொண்டிருந்த போதே எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலைக்குத் 
தள்ளப்பட்டார்கள்.
 அத்துடன் தந்தை செல்வநாயகம் முதல் தமிழ் மக்களின் தலைவர்கள் ஏமாற்றப்பட்டே வருகின்றதே வரலாறுகளாக இருக்கின்றன. அதே போன்று குறிப்பாக தமிழ் மக்களிற்காக இன்றிருக்கின்ற தலைவரான சம்மந்தனும் இந்த ஆட்சியாளர்களாலும் ஏமாற்றப்படலாம் எனவும் பொது மக்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக