18

siruppiddy

மார்ச் 09, 2016

முக்கிய அமைச்சர் தமிழ்வாணி விடுதலையின் பின்னணியில்!

பிரித்தானிய தன்னார்வ தொண்டரும் மருத்துவருமான தமிழ்வாணி என்ற பெண்ணின் விடுதலையின் பின்னணியில், கடந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் செயற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்வாணி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக சாட்சிமளித்தவர்களில் முக்கியமானவர் என 
சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில் இராணுவத்தினர், தமிழ் வாணியை கைது செய்திருந்தனர்.
தமிழ்வாணியை விடுதலை செய்து பிரித்தானியாவிற்கு அனுப்பி வைத்ததன் பின்னணியில் முக்கிய அமைச்சர் ஒருவர் 
செயற்பட்டுள்ளார்.
அப்போதைய இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் கோரிக்கைக்கு அமைய தமிழ்வாணி விடுதலை 
செய்யப்பட்டார்.
சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த தமிழ்வாணி, குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்திற்கு அபராதப் பணத் தொகையை செலுத்தி நாட்டை விட்டு வெளியேற இந்த அமைச்சர் 
உதவியுள்ளார்.
தமிழ் வாணியை விடுதலை செய்வது குறித்து இராணுவத்தின் கருத்து கோரப்படவில்லை.
இறுதிக்கட்ட போரின் போது தமிழ்வாணி புலிகளுடன் இணைந்து செயற்பட்டதாகவும், சிவிலியன்களுடன் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வரும் போது அவரை இராணுவத்தினர் கைது செய்தனர் எனவும் திவயின மேலும் தெரிவித்துள்ளது.
தமிழ்வாணியை விடுதலை செய்ய உதவிய மஹிந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரின் பெயரை ஊடகம் குறிப்பிடவில்லை.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக