18

siruppiddy

ஜூன் 09, 2016

இன்று இடம்பெற்ற கைக்குண்டு வீச்சில் இரு பெண்கள் உட்பட மூவர் சாவு!

கொஸ்வத்தை – தலங்கம பகுதியில் இன்று இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஆண் ஒருவரும் பலியாகினர்.
9 வயது சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் பலியான ஆண் புனிதத் தளம் ஒன்றில் 
பணிபுரிபவராவார்.
அவரிடம் பெண் ஒருவர் தனது தாய் மற்றும் மகளுடன் வழிபாடு நிமித்தம் சென்ற வேளை,  முரண்பாடு ஏற்பட்டுள்ளது. பின்னர், இது தொடர்பில் முறையிட குறித்த பெண் பொலிஸ் நிலையம்
 சென்றுள்ளார்.
மேலும் இந்த நிலையில், அங்கு வந்த அந்த ஆண் நபர் கைக்குண்டை வெடிக்க வைத்துள்ளார் என தெரியவந்துள்ளது. இதில், சம்பந்தப்பட்ட ஆணும், பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பெண்ணின் தாய் மற்றும் மகள் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்   
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக