18

siruppiddy

ஜூன் 19, 2016

ராணுவம் வடக்கிலிருந்து படிப்படியாக நீக்கப்படுமாம்!

இலங்கை அரசாங்கத்தினது உயர்மட்ட அரசியல்வாதிகளால் அடிக்கடி திருவாய் மலர்ந்த அறிக்கைகளுக்கு நேர்விரோதமாக அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவாசம் திருவாய் மலர்ந்திருப்பது அரசினது வார்த்தை ஜாலங்களில் ஒன்று என அமெரிக்க அதிகாரிகளுக்கு எங்கே விளங்கப்போகிறது.
அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் மேலும் கூறுகையில் வடக்கு கிழக்கிலிருக்கும் ராணுவத்தை படிப்படியாக குறைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அப்பட்டமான பொய்யை அமெரிக்காவுக்கு கூறியிருக்கிறார்.அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும்போதே வடக்கு கிழக்கில் ராணுவ பிரசன்னம் அகற்றப்படுவதுபற்றி உங்களது நிலைப்பாடு எவ்வாறு அமைந்திருக்கின்றது என்னும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கெட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு உரைத்தார். அத்துடன் சிறீலங்கா அரசு வழங்கிய உறுதிமொழிகளை படிப்படியாக நிறைவேற்றும் எனவும் அக் கூட்டத்தில் தூதுவர் உறுதியளித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் அடுத்த வருடத்துக்குள் அனைத்து ராணுவத்தினரும் அகற்றப்பட்டு
தேவைக்கேற்ப மாத்திரமே ராணுவத்தினர் வடகிழக்கில் நிறுத்தப்பட்டிருப்பர் எனவும் பிரசாத் காரியவாசம் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக