18

siruppiddy

பிப்ரவரி 26, 2019

படையினர் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் ட

வடக்கில் படையினர் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிக்க கோரி கையெழுத்து போராட்டமும், கவனவீர்ப்பு வாகன ஊர்வலமும் கேப்பாபுலவில் இன்று ஆரம்பிக்கப்பட்டன.
727 ஆவது நாளாக தங்கள் பூர்வீக காணிகளை விடுவிக்ககோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுடன் காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் இணைந்து இவற்றை
 முன்னெடுத்தன.
கேப்பாபுலவு வீதியால் சென்ற வாகன ஊர்வலம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்றடைந்து அங்கு ஜனாதிபதிக்கான மனு மாவட்ட உதவி செயலாளர் ஆ.லதுமீராவிடம்
 கையளிக்கப்பட்டது.
கையெழுத்து போராட்டம் முல்லைத்தீவில் ஆரம்பமாகி பரந்தன், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், பூநகரி, மன்னார், வவுனியா, நீர்கொழும்பு ஆகிய இடங்களுக்குச் சென்று கொழும்புடன் நிறைவடையும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>










0 கருத்துகள்:

கருத்துரையிடுக