18

siruppiddy

ஜூன் 30, 2013

அமெரிக்கப் பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை!


 சிறீலங்காவில் வெளிநாட்டுப் பிரஜைகளை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக அமெரிக்காவின் அண்மைய பயண எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய மாதங்களாக சிறீலங்காவில் வெளிநாட்டு பிரஜைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது
இலங்கைப் பொதுப் பயணிகள் பஸ்களில் அமெரிக்கப் பிரஜைகள் பயணம் செய்யக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக பெண்கள் தனியான பயணங்களை மேற்கொள்வது உசிதமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் கால தாமதமடைவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.பொது இடங்களில் வெளிநாட்டுப் பெண்கள் துன்புறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக