18

siruppiddy

மே 24, 2013

நடுவானில் தவிர்க்கப்பட்ட பாரிய விபத்து: பயணிகளின் திக் திக் ?


நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமான கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இண்டிகோ ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானமொன்று, 179 பயணிகளுடன் நேற்று மதியம் பகல் 12.57 மணிக்கு, கொல்கத்தாவில் இருந்து திப்ரூகருக்கு புறப்பட்டது.
விமானம் கிட்டத்தட்ட 30,000 அடி உயரத்தைத் தொட்டபோது, முன்புறக் கண்ணாடியில் விரிசல் இருந்ததை விமான ஓட்டிகள் கவனித்தனர்.
விரிசலோடு பயணத்தைத் தொடர்ந்தால் விபத்து ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த விமானிகள், கண்ணாடி உடைவதைத் தவிர்ப்பதற்காகவும், உயரத்தினால் ஏற்படும் அழுத்தத்தைக் குறைப்பதற்காகவும் உடனடியாக கொல்கத்தா திரும்ப தீர்மானித்தனர்.
விமானத்தின் திடீர் ஆட்டம், பயணிகளிடம் அச்சத்தை உண்டாக்கியது.
இதனால் தொழில்நுட்பக் குறைபாடு காரணமாகவே விமானம் கொல்கத்தா திருப்பப் பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
1.59 நிமிடத்திற்கு பிறகு, விமானம் பத்திரமாக கொல்கத்தாவில் தரை இறங்கியது.
பின்னர் பயணிகள் மாற்று விமானம் மூலம் மாலை 3.32 மணி அளவில் திப்ரூகர் திருப்பி அனுப்பப்பட்டனர்.
 

மே 21, 2013

ஜனாதிபதி ஒபாமா ஆப்பிரிக்கா பயணம்


அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா யூன் மாத இறுதியில் ஆப்பிரிக்கா பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தகவலை வெளியிட்டுள்ளது.
ஒபாமா அவரது மனைவி மிசெல்லுடன் மேற்கொள்ள இருக்கும் இந்த பயணத்தில் ஆப்பிரிக்காவில் உள்ள செனகல், டான்சானியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு செல்லவுள்ளதாகக் கூறப்படுகின்றது.
அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுகிடையேயான கூட்டுறவை மேம்படுத்துவதும், அமைதியை நிலைநாட்டுவதுமே இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.
மேலும் இந்த பயணத்தின் போது தென் ஆப்பிரிக்காவில் நிற வெறிக்கு ஏதிராக போராடிய 94 வயதான நெல்சன் மண்டேலாவை ஜனாதிபதி ஒபாமா சந்திக்கலாம் என்றும் கூறப்படுகிறது
 

மீனவர்கள் வடகொரியா சிறையிலிருந்து


சீன மீனவர்கள் 16 பேர் கடந்த வருடம் மே மாதம் 6ம் திகதி அன்று வடகொரியா மற்றும் சீன கடல் எல்லைக்கு அருகில் மீன்பிடித்து கொண்டிருந்தபொழுது கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து படகின் சொந்தக்காரரான யூ சியுஜீன் கூறுகையில், எங்களை விடுவிக்க 98,000 டொலர் பணயத் தொகை கேட்டதாகவும், அவர்கள் அனைவரும் வடகொரிய அரசின் ராணுவத்தினராக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் அண்டை நாடுகளுக்கு இடையே புதிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த மீனவர்களின் கைது சீன மக்களிடையே கடும் கோபத்தையும் ஏற்படுத்தி இருந்தது.
வடகொரியாவில் வணிகம் மற்றும் உதவித் தொடர்புகளில் சீனா முக்கியப் பங்கு வகித்தபோதிலும், அந்த நாடு கடந்த பெப்ரவரி மாதம் நடத்திய அணு ஆயுத சோதனைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் பணத்திற்காக வடகொரியா உள்ளூர் காவல்துறையினரால் சிறைபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட 16 சீன நாட்டு மீனவர்களை அவர்களின் படகுடன், வடகொரியா விடுதலை செய்துள்ளதாக இன்று சீனா நாட்டின் அரசு தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
 

மே 20, 2013

கூட்டமைப்பு பற்றி மாவை விளக்கம்,.,


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அத்திபாரமாக தமிழரசுக் கட்சி செயற்பட்டு அதில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்கும் சம உரிமை வழங்கி ஒன்றிணைத்து தமிழர் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் என்று தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா.
   யாழ். வளைவு திறப்பு நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  தமிழர் விடுதலைக் கூட்டணியின்மாநாடு மல்லாகத்தில் நடைபெற்றபோது, தமிழரசுக் கட்சி கூட்டணியில் பிரதான பங்கேற்று செயற்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோன்று இப்போது கூட்டமைப்பிலும் அத்திபாரமாக உள்ள தமிழரசுக்கட்சி ஏனைய கட்சிகளுக்கு சமநிலை வழங்கி அவற்றை அரவணைத்துச் சென்று தமிழர் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும்.
   தமிழரசுக் கட்சி எப்போதும் கூட்டமைப்பிலேயே இருக்கும். 1970 இல் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த நாகராசா என்பவர் யாழ். நகர முதல்வராக இருந்த போது கட்டப்பட்ட யாழ்.

மனித உரிமைக்கு இடமில்லை**


 இலங்கையில் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியுடன் யுத்தம் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அந்நாட்டில் அடிப்படை மனித உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் மரியாதை மென்மேலும் குறைந்துகொண்டு போவதாக தி கியுமன் றைட்ஸ் வாட்ச் மனித உரிமை ஆர்வலர் குழு தெரிவித்துள்ளது.

அரச படைகளும் விடுதலைப் புலிகளும் செய்ததாகக் குற்றம்சாட்டப்படும் போர்க்குற்றங்களை விசாரிக்கவோஇ சட்ட நவடிக்கை எடுக்கவோ அர்த்தமுள்ள நடவடிக்கை ஒன்றையும் மஹிந்த ராஜபக்ஷவின் இலங்கை அரசாங்கம் எடுக்கவில்லை என ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் குற்றம்சாட்டியுள்ளது.

மேலும் சுயாதீன ஊடகவியலாளர்கள் போன்றவர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என்றும்இ தமிழ் மக்களின் கஷ்டங்களை நிவர்த்தி செய்வது குறித்து அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அது சாடியுள்ளது.

'துஷ்பிரயோகங்களை எதிர்கொண்டவர்கள் நீதியை எதிர்பார்த்தும்இ காணாமல்போனவர்கள் பற்றிய தகவலை எதிர்பார்த்தும்இ தமது அடிப்படை மனித உரிமைக்கு சிறிதளவு மரியாதையை எதிர்பார்த்தும் ஏங்கி நிற்கிறார்கள்இ ஆனால் ராஜபக்ஷ அரசாங்கமோ அதில் ஒன்றையும் நிறைவேற்றிக் கொடுக்காமல் அவர்கள் மீது மேலும் அடக்குமுறையை கட்டவிழ்த்து வருகிறது' என ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் ஆசிய விவகார இயக்குநர் பிராட் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் "பரந்துபட்ட அடக்குமுறையால் மக்களின் அடிப்படை சுதந்திரங்களை தொடர்ந்தும் மறுத்துவரலாம் எனும் விதமாக இலங்கை அரசு செயல்படுகிறது. ஆனால் யுத்தகாலத்திலேயே பல கஷ்டங்களுக்கு இடையில் உண்மையை வெளிக்கொண்டுவந்த ஆர்வலர்கள் இனியும்கூட
 

மே 18, 2013

இன்னொரு முள்ளிவாய்கால் ஏற்படும்

 
மிரட்டுகிறது சிறிலங்கா புலனாய்வுத்துறை,தமிழீழத்தின் மீது சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட மிலேச்சத்தமான போரில் உயிரிழந்த அப்பாவித் தமிழ் மக்களை நினைவுகூர்ந்தால் இன்னொரு முள்ளிவாய்க்கால் வழங்கப்படும் என்று சிறிலங்கா அரசின் புலனாய்வுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.எனினும், இறுதிக்கட்ட போரின் போது உயிர் நீத்த தமது உறவுகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்கு எந்தத் தடையும் கிடையாது என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.மக்களுக்கு அஞ்சலி செலுத்த இராணுவத்தினர் எந்த தடையும் விதிக்கமாட்டார்கள். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவு கூர்வதற்கு இடமளிக்கப்படமாட்டாது என இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதிக்கட்ட போரின் போது ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை சிறிலங்கா இராணுவம் கொன்று தீர்த்தது.

இதில் பலியான தமது உறவுகளை நினைத்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ் மக்களால் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ளன.

தமிழர் தாயகப் பகுதிகளிலும், புலம்பெயர் நாடுகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை உணர்ச்சிபூர்வமாக அனுஷ்டிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்துறையின் கடும் அச்சுறுத்தலின் மத்தியில் உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த தாயகத்து தமிழர்கள் தயாராகி வருகின்றனர்.

மே 15, 2013

நவீன கள்ளுத் தவறணைகள்!


 
யாழ். வடமராட்சியில் அச்சுவேலியில் நெருப்புமூட்டி பகுதியில் அமையப் பெற்று உள்ள கள்ளுத் தவறணை இது.
 நவீனமயப்படுத்தப்பட்ட தவறணைகளில் இதுவும் ஒன்று.
 கொட்டிலுக்கு பதிலாக வீடு ஒன்றில் நடத்தப்படுகின்றது.
 மேசைகள், கதிரைகள் உள்ளே ஒழுங்காக போடப்பட்டு இருந்தன.
 பிளாவுக்கு பதிலாக கண்ணாடி குவளைகள்.
 வாடிக்கையாளர்களின் நலனை கண்காணிக்க சிப்பந்திகள்.
 இருப்பினும் காற்று வாங்குகின்றமைக்காக சில நுகர்வோர்கள் வாசலை அண்டிய இடத்தில் சீமெந்து தரையில் அமர்ந்து இருந்தனர்.
 பாரம்பரியமாக இருந்து வருகின்ற தவறணைகளை பார்க்கின்றபோதுதான் நவீனமயப்படுத்தப்பட்டிருக்கின்ற தவறணை என்கிற அர்த்தத்தை சரியாக புரிந்து கொள்ள முடியும் என்று பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்தார்,