18

siruppiddy

மே 18, 2013

இன்னொரு முள்ளிவாய்கால் ஏற்படும்

 
மிரட்டுகிறது சிறிலங்கா புலனாய்வுத்துறை,தமிழீழத்தின் மீது சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட மிலேச்சத்தமான போரில் உயிரிழந்த அப்பாவித் தமிழ் மக்களை நினைவுகூர்ந்தால் இன்னொரு முள்ளிவாய்க்கால் வழங்கப்படும் என்று சிறிலங்கா அரசின் புலனாய்வுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.எனினும், இறுதிக்கட்ட போரின் போது உயிர் நீத்த தமது உறவுகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்கு எந்தத் தடையும் கிடையாது என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.மக்களுக்கு அஞ்சலி செலுத்த இராணுவத்தினர் எந்த தடையும் விதிக்கமாட்டார்கள். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவு கூர்வதற்கு இடமளிக்கப்படமாட்டாது என இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதிக்கட்ட போரின் போது ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை சிறிலங்கா இராணுவம் கொன்று தீர்த்தது.

இதில் பலியான தமது உறவுகளை நினைத்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ் மக்களால் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ளன.

தமிழர் தாயகப் பகுதிகளிலும், புலம்பெயர் நாடுகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை உணர்ச்சிபூர்வமாக அனுஷ்டிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்துறையின் கடும் அச்சுறுத்தலின் மத்தியில் உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த தாயகத்து தமிழர்கள் தயாராகி வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக