த.தே.ம.முன்னணி அமைப்பாளரும் புலிகளுக்காக தகவல் சேகரித்தவராம்!?
கிளிநொச்சியில் சிறிலங்கா காவல்துறை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர், தங்கவேல் ஜெகதீஸ்வரன் சிறிலங்காப் படையினருடன் உறவாடி அவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டியதாக சிறிலங்கா காவல்துறை கூறியுள்ளது. கிளிநொச்சி மருத்துவமனையில் தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றும் இவர், சிறிலங்கா படையினருடன் நட்புறவு கொண்டு பாதுகாப்பு கட்டமைப்புகளுக்குள் ஊடுருவி, தகவல்களைத் திரட்டி விடுதலைப் புலிகளுக்கு வழங்கத் திட்டமிட்டிருந்தார் என்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கிளிநொச்சியில் சிறிலங்கா காவல்துறை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர், தங்கவேல் ஜெகதீஸ்வரன் சிறிலங்காப் படையினருடன் உறவாடி அவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டியதாக சிறிலங்கா காவல்துறை கூறியுள்ளது. கிளிநொச்சி மருத்துவமனையில் தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றும் இவர், சிறிலங்கா படையினருடன் நட்புறவு கொண்டு பாதுகாப்பு கட்டமைப்புகளுக்குள் ஊடுருவி, தகவல்களைத் திரட்டி விடுதலைப் புலிகளுக்கு வழங்கத் திட்டமிட்டிருந்தார் என்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளிடம் இருந்து சிறிலங்கா படையினர் கைப்பற்றிய ஆவணம் ஒன்றில் இவரது பெயரும் உள்ளடங்கியிருந்ததாகவும், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக