18

siruppiddy

மே 10, 2014

ஆயுதங்கள் மீட்பு 5 ஆண்டுகளின் பின்பு ...

முல்லைத்தீவு, வெள்ளாம் முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயகத்தினரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான கைத்துப்பாக்கித் தோட்டாக்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

புதைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் தோட்டாக்களை கிழக்கு கடற்படை முகாம் அதிகாரிகள் நேற்று மாலை கண்டுபிடித்ததாக கடற்படையின் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
இதில் 98 தர 19 மி.மீ. அளவுடைய ரவைகள் – 120000, எஸ்.ஜி. 12  போரா ரவைகள் – 2750 மற்றும் 357 ரக ரவைகள் – 5600  என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமையவே தோட்டாக்கள் மீட்கப்பட்டன.

இதன் போது இராணுவத்தினரும் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பை வழங்கியிருந்தாக கடற்படைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்..



0 கருத்துகள்:

கருத்துரையிடுக