18

siruppiddy

மே 04, 2014

புலிக்கொடிக்கு தடை விதித்துள்ள பாடசாலை?

கனேடிய பாடசாலையொன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியை தடை செய்துள்ளது. குறித்த கனேடிய உயர் பள்ளி வளாகத்திற்குள் மாணவர் புலிக் கொடியை கொண்டு வரக்கூடாது என அறிவித்துள்ளது. தரம் 12 மாணவர் ஒருவர் பாடசாலைக்கு புலிக்கொடியை எடுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு தடவைகள் நடைபெற்ற ஆண்டு நிகழ்வுகளின் போது அவர் இவ்வாறு புலிக்கொடியை ஏந்திச்சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. தென் கிழக்கு ஒன்டாரியோவில் இந்த பாடசாலை அமைந்துள்ளது. இம்முறை நடைபெற்ற ஆண்டு நிகழ்வில் புலிக்கொடியை ஏந்திச் செல்லக் கூடாது என பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த கொடிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு n;தாடர்பு கிடையாது என அவரது தந்தை  தெரிவித்துள்ளார். கொடி ஒன்றைக் கூட பாடசாலைக்கு கொண்டு செல்ல முடியாவிட்டால் எவ்வாறு எனது கலாச்சாரத்தை பிரதிபலிப்பது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். குறித்த கொடியை ஏந்துவது சக மாணவர்களுக்கு பிரச்சினையாக இருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கனடா போன்ற பல் கலாச்சார நாட்டில் தமது கலாச்சாரத்தை பிரதிபலிக்க கிட்டாமை வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக