18

siruppiddy

ஜனவரி 22, 2016

நாடு திரும்­பிய ஊட­க­வி­ய­லாளர் புண்­ணி­ய­மூர்த்தி கைது

அவுஸ்­தி­ரே­லி­யா­வி­லி­ருந்து நாடு திரும்­பிய மட்­டக்­க­ளப்பைச் சேர்ந்த ஊட­க­வி­ய­லாளர் புண்­ணி­ய­மூர்த்தி சசி­கரன் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.
நேற்று முன்­தினம் மாலை குறித்த ஊட­க­வி­ய­லாளர் நாடு திரும்­பிய போது கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வைத்து அவரை கைது செய்­த­தா­கவும் குடி­வ­ரவு குடி­ய­கல்வு சட்­டங்­களை மீறி­யமை தொடர்­பி­லேயே 
அவரைக் கைது செய்­த­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வரு­வ­தா­வது, கடந்த 2012 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் ஹிக்­க­டுவை பகு­தி­யி­லி­ருந்து சட்ட விரோ­த­மாக படகு மூலம் இவர் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு சென்­றுள்ளார். இந் நிலை­யி­லேயே அவர் நேற்று முன் தினம் இலங்­கைக்கு திரும்­பி­யுள்ளார்.
இதன் போது விமான நிலைய குடி­வ­ரவு குடி­ய­கல்வு அதி­கா­­ரிகள் புண்­ணி­ய­மூர்த்தி சசி­க­ரனை கைது செய்த நிலையில் அவரை குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளனர்.
சட்ட விரோ­த­மாக சட்ட ரீதி­யி­லான துறை முகம் அல்­லாத ஒரு இடத்­தி­லி­ருந்து வெளி நாடொன்­றுக்கு பய­ணித்­தமை தொடர்பில் 
குடி­வ­ரவு – குடி­ய­கல்வு சட்­டங்­களை மீறினார் என்ற குற்­றச்­சாட்டில் கைது செய்யப்பட்ட சசிகரன், நேற்று மாலை நீர்கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக