18

siruppiddy

செப்டம்பர் 05, 2017

யுத்தகளத்தில் நிர்க்கதியான நிலையில் தமிழ்மக்களின் புகைப்படம்!!

இறுதி யுத்தத்தின் போது 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற  பாதிக்கப்பட்டிருந்த பொதுமக்கள் தொடர்பிலான புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன.
இந்த புகைப்படங்களானது இராணுவக்கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி யுத்தம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
அத்துடன், ஆயிரக்கணக்கான பொது மக்கள் நிர்கதியான நிலையில் அகதிகளாக்கப்பட்டிருந்தனர். இவ்வாறான நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவே தற்போது வெளியாகியுள்ளன.
இறுதி யுத்தத்தின் போது கையில் கிடைத்த உடமைகளுடன் பொது மக்கள் மீண்டிருந்த நிலையில், பொதுமக்களிடம் இருந்து இலத்திரினியல் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை இராணுவத்தினர் 
கைப்பற்றியிருந்தனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட பொருட்கள் மீளவும் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அதிலிருந்த கெமரா ஒன்றிலிருந்து இந்த புகைப்படங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக