18

siruppiddy

நவம்பர் 28, 2018

முப்படைகளின் பிர­தானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கைது

பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன சற்று முன்னர் குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.11 மாணவர்கள் கடத்தல் விவகாரத்தில் பிர­தான 
சந்­தேகநபர் நேவி சம்­பத்­துக்கு அடைக்­கலம் கொடுத்தமை தொடர்பில் குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளா­கி­யுள்ள ரவீந்திர விஜேகுணரத்னவை நேற்று காலை 10.00 மணிக்கு சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை தொடர்பிலான விசா­ரணைப் பிரிவில் அவரை ஆஜ­ரா­கு­மாறு அழைப்பு விடுக்­கப்­பட்­டிருந்தது.
எனினும், எனக்கு எந்த உத்­தி­யோ­கபூர்வ
 அறி­வித்­தலும் கிடைக்கவில்லை.எனினும் இன்று நீதிமன்றில் ஆஜராகத் தயார் என தெரிவித்திருந்தார். அதன்படி அவர் இன்று நீதிமன்றில் ஆஜரானார்.நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் சற்று முன்னர் ரவீந்திர விஜேகுணரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக