18

siruppiddy

டிசம்பர் 03, 2018

பொலிஸ் அதிகாரி அதிரடஎன் தந்தை தமிழன் என்பதில் எனக்குப் பெருமை

குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் பொலிஸ் பரி­சோ­தகர் நிஷாந்த டி சில்வா தனது தந்தை தமிழர் என்­பது குறித்து நான் பெரு­மைப்­ப­டு­கின்றேன் என தெரி­வித்­துள்ளார். மஹிந்த ராஜ­பக்ஷவின் பொது­ஜன
 பெர­முன கட்­சியின் உறுப்­பினரான ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிர­சன்ன இவ­ரது பூர்­வீகம் தொடர்பில் கேள்வி எழுப்பும் வகையில் கருத்து வெளி­யிட்­டி­ருந்தார். அதற்கு பதி­ல­ளிக்கும் வகை­யி­லேயே நிஷாந்த டி சில்வா இவ்வாறு குறிப்­பிட்­டுள்ளார்.
நிஷாந்த டி சில்வா தொடர்ந்தும் தெரிவிக்கையில், நான் மனிதத் தன்­மையை மதிக்­கி­ன்றேன் ஒரு­வரின் இனத்தை அல்ல எனத் தெரிவித்ததோடு, எனது கட­மையின் போது கட்சி, நிற, இன, மத பேதங்கள் இல்லை. அனைவரும் மனி­தர்கள் என்ற அடிப்­ப­டை­யி­லேயே நான் சேவை செய்­கின்றேன்.
அத்துடன் “எனது தந்தை, எனது தாத்தா என
 எனது பரம்­ப­ரையே இந்த நாட்டில் வாழ்ந்து இந்த நாட்­டிற்­காக சேவை செய்­த­வர்­க­ளாவர். அவர்கள் அனைவரையும் நினைத்து நான் பெரு­மைப்­ப­டு­கின்றேன். எனவும் தெரிவித்துள்ளார். மேலும் எனது கடமை தொடர்பில் பலர் கோப­ம­டை­கின்­றார்கள். அது குறித்து நான் எதுவிதமான் ஐயமும் கொள்ளவில்லை” எனவும் நிஷாந்த டி சில்வா மேலும்
 குறிப்பிட்டுள்ளார்.
எனது பிறப்பு சான்­றி­தழில் எனக்கு சிங்­க­ளவர் எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எனினும் நான் மனித இனத்­திற்கே உரி­மை­யா­கின்றேன். சிங்­களம், தமிழ், முஸ்­லி­மாக இருப்­ப­தற்கு முன்னர்
 அனை­வரும் மனி­த­னாக 
இருப்போம். அத்­துடன் நான் ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் மன­ச்சாட்­சிக்கு
 உண்­மை­யா­கவும், நாட்டின் சட்­டத்­திற்­க­மை­யவும் செயற்­ப­டு­கிறேன். இனி­மேலும் அப்­படித் தான் செயற்­ப­டுவேன். எனத் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக