18

siruppiddy

டிசம்பர் 03, 2018

களுவாஞ்சிக்குடியில் யுவதியை கடத்திய இளைஞர் குழு

விரதம் அனுஷ்டிப்பதற்காக ஆலயத்திற்கு வருகை தந்திருந்த யுவதி, இளைஞர் குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டபோது துரிதமாகச் செயற்பட்ட பொதுமக்கள் யுவதியை கடத்தல் குழுவிடமிருந்து மீட்டதோடு சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களான இளைஞர்களையும் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் நேற்று இடம்பெற்ற இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது,
தன்னைக் காப்பாற்றுமாறு அவலக் குரலெழுப்பிய நிலையில் இளம்பெண்ணொருவர் முச்சக்கரவண்டியில் கொண்டு செல்லப்படுவதை அவதானித்த பொதுமக்கள் விரைந்து செயற்பட்டு
 முச்சக்கரவண்டியைப் பின்தொடர்ந்து சென்று களுதாவளை பிரதேச சபைக்கு சமீபமாக முச்சக்கர வண்டியை வழிமறித்துள்ளனர்.
அவ்வேளையில் முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்றவரும் மற்றைய இளைஞர்கள் இருவரும் தப்பிச் செல்ல 
முயன்றுள்ளனர்.
எனினும் பொதுமக்கள் சாதுரியமாகச் செயற்பட்டு யுவதியை மீட்டதோடு சந்தேக நபர்களான இளைஞர்கள் மூவரையும் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கடத்தப்பட்ட யுவதி போரதீவைச் சேர்ந்தவர் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
காதல் விவகாரமே இந்தக் கடத்தலுக்குக் காரணம் என்பது ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து புலப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம்பற்றிய மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக