18

siruppiddy

டிசம்பர் 22, 2018

தடம் பதிக்கும் தமிழர் தலைநகரில் அமெரிக்க இராணுவம்

இலங்கையில் அமெரிக்காவின் இராணுவ முகாமினை நிர்மாணிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.திருகோணமலையில்
 நிர்மாணிக்கப்படவுள்ள இந்த முகாமினை, அமெரிக்க இராணுவ முகாமில் கடற்படை தளவாட மத்திய நிலையமாக பயன்படுத்த அமெரிக்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
அமெரிக்க கடற்படையின் தகவல் தொடர்பு அதிகாரி கிராண்ட் கிரேஸ் என்பவரை அடிப்படையாக கொண்டு இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.இராணுவ முகாமினை 
அமைக்கும் முதற்கட்ட நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள கடந்த ஒகஸ்ட் மாதம் என்கரோஜ் என்ற அமெரிக்க கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை தந்ததாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையத்தின் ஊடாக இந்திய கடல் எல்லையில் நிறுத்தப்படும் அமெரிக்க கப்பல்களுக்கு தேவையான சேவை வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.எனினும், இவ்வாறான
 நிலையம் ஒன்று ஒரு போதும் இந்திய எல்லையில் இதற்கு முன்னர் நிர்மாணிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக