18

siruppiddy

ஜனவரி 13, 2020

செலவுகளைக் குறைக்கும் நோக்கில் தேசிய தைப்பொங்கல் தின விழா இரத்து

நாடு­த­ழு­விய ரீதியில் அனைத்து மாவட்­டங்­க­ளையும் ஒன்­று­ப­டுத்தி கடந்த அர­சாங்கம் முன்­னெ­டுத்த தேசிய பொங்கல் தின விழா இம்­முறை இரத்து செய்­யப்­பட்­டுள்­ளது. தேவை­யற்ற
 செல­வு­களை 
குறைக்கும் பட்­சத்தில் மூன்று மாவட்­டங்­களில் உள்ள தமிழ் இளைஞர், யுவ­தி­களை உள்­ள­டக்­கிய விதத்தில் பொங்கல் தின நிகழ்­வினை நடத்த தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது என இளைஞர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் துமிந்த திஸா­நா­யக்க தெரி­வித்தார்.இது தொடர்பில் இரா­ஜாங்க அமைச்சர் 
குறிப்­பிடும் போது;
தேசிய நல்­லி­ணக்­கத்தை மேம்­ப­டுத்­து­வ­தாக குறிப்­பிட்டு கடந்த அர­சாங்கம் மூன்று இனத்­த­வர்­களின் பிர­தான பண்­டி­கை­க­ளுக்கு 25 மாவட்­டங்­க­ளிலும் உள்ள இளைஞர், யுவ­தி­களை ஒன்­றி­ணைத்து தேசிய நிகழ்­வாக அந்த பண்­டி­கை­யினை கொண்­டா­டி­யது. இதனால் எவ்­வித 
பயனும், மாற்­றங்­களும் ஏற்­ப­ட­வில்லை மாறாக
 வீண் செல­வுகள் மாத்­தி­ரமே மிகு­தி­யா­கின. உல­கவாழ் இந்­துக்கள் நாளை மறு­தினம் தைப்­பொங்கல் பண்­டி­கை­யினை கொண்­டா­ட­வுள்­ளார்கள். இதனை தேசிய நிகழ்­வாக கடந்த அர­சாங்கம் மேற்­கொண்ட விதத்தில் கொண்­டாட அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளதா
 என்ற கேள்வி எழு­கின்­றது.
25 மாவட்ட இளை­ஞர்­க­ளையும் ஒன்­றி­ணைத்து தைப்­பொங்கல் பண்­டி­கை­யினை கொண்­டாட தீர்­மா­னிக்­க­வில்லை. இதனால் பாரிய செல­வுகள் ஏற்­ப­டு­கின்­றன. அதனால், வடக்கு மாகா­ணத்தில் யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு­னியா ஆகிய மூன்று மாவட்­டங்­க­ளிலும் உள்ள 
இளை­ஞர்­களை
 ஒன்­று­ப­டுத்தி பொங்கல் தின நிகழ்­வினை கொண்­டாட தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.இந்­நி­கழ்­விற்கு செல­வாகும் நிதியினை ஒவ்­வொரு இளைஞர் கழக அபிவிருத்திக்கும் செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இனி 
இடம்பெறவுள்ள அனைத்து பண்டிகைகளிலும் இம்முறைமையினைக் கையாள்வோம் எனவும் இளைஞர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் துமிந்த திஸா­நா­யக்க மேலும் தெரிவித்துள்ளார் .

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக