18

siruppiddy

ஜனவரி 05, 2020

மர்ம நபர் பாரிஸ் மாநகரில் மேற்கொண்ட வெறியாட்டம் இருவர் ஆபத்தான நிலையில்

பாரிஸ் நகரில் வெடிக்கும் ஆடை அணிந்த மர்ம நபர் ஒருவர் பொதுமக்கள் மீது முன்னெடுத்த தாக்குதலில் நான்கு பேர் இரையாகியுள்ளனர்.குறித்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும்,
 இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் துரிதமாக செயல்பட்டு அந்த நபரை சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்குப் பிறகு, தலைநகரின் மத்திய பகுதியிலிருந்து ஏழு மைல் தொலைவில் உள்ள Villejuif புறநகரில் இந்த இரத்த வெறியாட்டம் நடந்துள்ளது.
குறித்த பூங்காவில் கத்திக் குத்து மேற்கொண்ட நபரை அந்நாட்டு பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.அதேவேளை கத்திக்குத்து தாக்குதலுக்குள்ளாகி சுமார் நான்கு
 பேர் வரையில் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பிரான்ஸ் தலைநகரிலிருந்து தெற்கே 7 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள வில்லேஜுஃப் நகரில் உள்ள பூங்காவிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு , சந்தேக நபரையும் பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக