18

siruppiddy

அக்டோபர் 13, 2017

ஒரு நாள் பள்ளிக்கூடம் வந்தால் 100 ரூபாய் உதவித்தொகை

இலங்கையில் வறுமை மற்றும் பிற காரணங்களினால் பள்ளிக்கூடம் செல்லாத மாணவர்களுக்கு மாதம்தோறும் சிறப்பு கொடுப்பணவு வழங்குவது குறித்து மத்திய கல்வி அமைச்சகம்  கவனம் 
செலுத்தி வருகின்றது.
அடுத்த வருடம் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் ஊடாக மாணவர்கள் இடை விலகல் தடுக்கப்படுவது மட்டுமன்றி, அவர்களின் கல்வி ஆர்வத்தையும் அதிகரிக்க முடியும் என கல்வி அமைச்சகம் எதிர்பார்க்கின்றது.
இந்தத் திட்டத்தின் கீழ் பள்ளிக்கூடத்திற்கு சமூகமளிக்கும் நாளொன்றுக்கு ரூபாய் 100 வீதம் மாதந்திரக் கொடுப்பணவு வழங்குவது தொடர்பாக தற்போது ஆராயப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறுகின்றார்.
அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் இது தொடர்பான யோசனை முன்வைக்கப்படவிருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இலங்கையில் தற்போது 5 முதல்17 வரை பள்ளிக் கல்வி பெறுவதற்கான வயதாகும். அடுத்த ஆண்டு 5 முதல் 19 வரை வயதை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் அரச மற்றும் தனியார் பள்ளிகளில் சுமார் 45 லட்சம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் இலவசப் பாட நூல்கள், சீருடை, சத்துணவு மற்றும் மருத்துவக் காப்புறுதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அரசாங்கத்தினால் மாணவர்களுக்கு இலவசமாகக் கிடைக்கின்றன.
இந்த வசதிகள் மற்றும் சலுகைகள் கிடைத்தும் பள்ளி செல்லக்கூடிய வயதுடைய 4,52,661 பேர் பள்ளிக்கூடம் செல்வதில்லை என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 51,249 பேர் இதுவரை ஒரு நாள் கூட பள்ளிக்கூடம் செல்லாதவர்கள் என 
கூறப்படுகின்றது.
கல்வி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த யோசனைக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் " மாணவர் வரவுக்கு ரூபாய் 100 என்ற இந்த யோசனை அவசியமற்றது"
 என கூறுகின்றது.
"அடுத்த வருடம் நடைபெறவுள்ள தேர்தல்களை மையப்படுத்திய இந்த யோசனை முன் வைக்கப்படுகின்றது" என அந்த சங்கத்தின் பொதுச் செயலாளரான ஜோசப் ஸ்டாலின் குற்றம் சாட்டுகின்றார்.
இலங்கையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 45 இலட்சம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர்
"கல்வியில் சம வாயப்பு மற்றும் பாகுபாடு இன்றி பள்ளிக்கூடங்கள் அபிவிருத்தி செய்யப்படுவது பற்றித்தான் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்துகின்றார்.
இந்த யோசனையை "மாணவர்களின் வரவுக்கு கொடுக்கும் லஞ்சம் "என விமர்சிக்கின்றார் ஓய்வு பெற்ற பள்ளிக்கூட அதிபரான சி
தம்பரபிள்ளை நவரெத்தினம்.
"இந்த யோசனை பாடசாலை நிர்வாகத்தையும் பெற்றோரையும் தவறாக வழி நடத்தும். பெற்றோர் பிள்ளைகளை வேலைக்கு அனுப்புவது
 போன்று அனுப்புவார்கள்.
மாணவர்கள் வரவு பதிவு செய்யும் சந்தர்ப்பத்தில் பள்ளிக்கூடங்களில் நிர்வாக முறைகேடுகளுக்கும் வாய்ப்பு உண்டு" என்று அவர் கூறுகிறார்.
"இடை விலகல் மற்றும் பாடசாலை செல்லாத
 மாணவர்களை இனம் கண்டு இணைத்துக் கொள்வதற்காக பிரதேச ரீதியாக சிறப்புப் பாடசாலைகள் அமைக்கப்பட்டு இலவச உணவு மற்றும் தங்குமிட வசதிகளை அரசு ஏற்படுத்திக் கொடுப்பது தான் பொருத்தமான தீர்வாக இருக்கும்" என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


அக்டோபர் 11, 2017

வித்தியா வழக்கில் மரண தண்டனை விதித வர்களுக்கு விடுதலை கிடைக்குமா


மீண்டும் விசாரணைக்கு வரும் வித்தியா வழக்கு!! மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு விடுதலை கிடைக்குமா??

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரிகளும் குற்றவாளிகளின் சட்டத்தரணிகளும் தனித்தனியாக யாழ். மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

ஏழு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிராக போகம்பரை சிறைச்சாலையின் அத்தியட்சகர் பதிவுத்தபாலில் மேன்முறையீட்டு மனுவை அனுப்பி வைத்துள்ளார்.

படுகொலையின் பிரதான குற்றவாளியான மகாலிங்கம் சசிகுமார் (சுவிஸ்குமார்) மற்றும் நான்காம் இலக்க குற்றவாளியான மகாலிங்கம் சசிதரன் ஆகியோர் சார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி மேன்முறையீடு செய்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நவற்கிரி .கொம்1 செய்தி >>


அக்டோபர் 10, 2017

பிரபாகரம் குறித்த வீரவரலாற்றின் தொடர்ச்சி என்ன?

முதலில் உங்கள் மக்களிற்கு என்ன தேவை என்பது தெரிந்திருக்கவேண்டும்… இரண்டாவதாக அதை அடைவதற்கான மார்க்கம் தெரிந்திருக்கவேண்டும்… இறுதியாக அதை அடைவதற்கான முழுமையான அர்ப்பணிப்பு இருந்தாக வேண்டும்… என்றார்.
இன்று இவை மூன்றையும் கொண்டிருக்கும் ஒரு தலைமையை ஈழத்திலோ ஈழத்திற்கு வெளியிலோ முடிந்தால் அடையாளம் காட்டுங்கள்… இந்நிலையை எட்டுவதற்கு பல்பரிமாண ஆளுமை
 இருந்தாக வேண்டும்….
இன்றும் பிரபாகரன் என்ற தலமையை தமக்கு பிடித்த ஒரு பரிமாணத்திலேயே அறிந்து புரிந்து பலர் கொண்டாடிக் கொண்டிருக்கிற்ன்றனர். அவரின் பல்பரிமாண ஆளுமையையும் அதுவே அவரை ஒரு உயரிய நிலைக்கு இட்டுச் சென்றது என்பதையும் முழுமையாக புரிந்து கொண்ட
வர்களாக இல்லை.
பிரபாகரன் தன்னை சுற்றியிருந்தவர்களிடமும் இவ்வாறான பல்பரிமாண ஆளுமையை வளர்த்துக் கொண்டே இருந்தார். அதை புரிந்து கொண்டு தம்மை அவ்வாறு வளர்த்துக் கொண்ட பலர் ஈழ விடுதலை வரலாற்றில் தாமும் சாதனையாளர்களானார்கள்… கூடவே அர்ப்பணிப்பின் உயர் வடிவமாகி மாவீரக்களுமாகினர்… அது குறித்து விரிவாக 
பின்னர் பார்ப்போம்….
சொன்ன மூன்று விடயங்களை கொண்டிருந்தால் மட்டும் போதாது… எந்த மக்களுக்காக களம் கண்டீர்களோ அந்த மக்களின் மனங்களை வென்றவர்களாக அந்த மக்களுக்கு நம்பிக்கை ஊட்டி உங்கள் பின்னால் அணிவகுக்க எப்போது உங்களால் முடிகிறதோ அப்போதே மக்கள் மயப்படுத்தப்பட்ட ஒரு தேசிய போராட்டத்தில் 
மக்கள் பலத்துடன் உங்களால் முன்னேற முடியும். இதில் முதலில் உங்கள் மக்களின் பலம் பலவீனம் குறித்த முழுமையான புரிதல் உங்களுக்கு இருந்தாக வேண்டும்… இது ஈழத்தில் இருந்து தமிழகத்தில் சற்று மாறுபடலாம்…
மலேசியாவில் இன்னும் வேறுபடலாம்… இவேவேளை காலத்திற்கு காலமும்… போராட்ட களங்களிற்கு ஏற்பவும் கூட இது மாறுபடலாம் அல்லது வேறுபடலாம்… சுருங்கக்கூறின் இதற்கென்று ஒன்றும் நிரந்தர போமிலா கிடையாது… இங்கு தான் தலைமைகளின் ஆளுமை வெளிப்படுகிறது… அதனால் தான் பலநூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிறந்த 
தலைமை என்கிறோம்…
ஈழத்தமிழினத்தில் உள்ள முக்கிய பலவீனம் நம்பிக்கையை இலகுவாக தொலைத்துவிடுவது… இந்த நம்பிக்கையை கட்டியெழுப்புவதை பிரபாகரன் வெற்றிகரமாக கட்டம் கட்டமாக தொடர்ச்சியாக ஏறுநிலை 
படிமாணத்தில் செய்தார்.
இதை முள்ளிவாய்காலுக்கு பின்னராக கடந்த எட்டு ஆண்டுகளில் யாரும் செய்யதாக தெரியவில்லை…
முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான காலம் என்பது மக்கள் நம்பிக்கையை மீண்டும் தொலைத்துவிட்ட காலம்… சிறதுசிறிதாக என்றாலும் மக்களிற்கு வெற்றியை காட்டுங்கள்… இல்லையேல் விரைவில் இந்த மக்களை இழந்து விடுவீர்கள் என தாயகத்தில் இருந்து புலம்வரை நானும் அனைவரிடமும் கதறிப்பாத்துவிட்டேன்… பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும்… பந்தா தலைமைகள் மக்கள் தலமைகளாக
 முடியுமா?
இதற்கான ஒரு உதாரணத்தை என் பதிவுகளில் இருந்தே எடுத்து வருகின்றேன்… நானும் பல பதிவுகளை இட்டு வருகின்றேன்… சமீபத்தில் அமெரிக்க கோப்பைளை வென்றது கனடிய தமிழர் இளையோர் உதைபந்தாட்ட அணி என்றொரு செய்தியை 
தரவேற்றியிருந்தேன்… அதற்கு காட்டிய ஆதரவு வெளிப்பாடும் பகிர்வுமே இதற்கான பதில்… அவர்களின் சாதிப்பு உங்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தது….
உங்களின் வெற்றி போன்ற உணர்வை 
ஏற்படுத்தியது… இளையோர் சாதிப்பார்கள் என்றொரு சிறு நம்பிக்கையையாவது ஏற்படுத்தியது… இவ்வாறு நல்ல செய்திகள் தொடர்ச்சியாக வருமானால் இனத்தின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை உங்களிடம் தானாகவே 
அதிகரிக்கும் அல்லவா?
இவ்வாறான நல்ல செய்திகள் அரசியல் சார்ந்தோ பொருண்மியம் சார்ந்தோ சமூகம் சார்ந்தோ விளையாட்டு சார்ந்தோ கலை சார்ந்தோ அல்லது இன்னும் ஏதோ துறைசார்ந்தோ அமையலாம்… இரண்டாவது இவ்வாறு அமையும் செய்திகள் உடனுக்கு உடன் அம்மக்கள் குழுமத்திடமும் உரிய முறையில் பகிரப்படல் வேண்டும்… அதாவது இதை ஆங்கிலத்தில் சொல்வதானால மாக்கட்டிங்…
இங்கும் தமிழ் இனத்தில் பாரிய குறைபாடு… போராட்ட காலத்தில் கூட இவ்விடயத்தில் புலம்பெயர் தமிழர் தரப்பு தன்னை முழுமையாக வளர்த்துக் கொள்ளவில்லை… குறிப்பாக தமிழர் கடந்த 
பரப்புரையில்…
ஆகவே பிரபாகரம் குறித்த சரியாக புரிதல் இருந்தால் சின்ன சின்ன வெற்றிகளை நோக்கியாவது வேலைத்திட்டங்களை உருவாக்குங்கள்… அவ்வெற்றிகளை உங்கள் மக்களிடம் உடன்
 உரியமுறையில் பகிர்ந்து அவர்கள் இழந்துவிட்ட நம்பிக்கையை கட்டியெழுப்பப்பாருங்கள்…
அண்ணை வருவார் என்று பாட்டு போட்டுகொண்டிருப்பதை 
விடுத்து… ஒரு தலைவன் காட்டிய வழியில் சாதித்து இம்மக்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் இருக்கப்பாருங்கள்…. அது தான் அவர் படைத்த உயரிய வீரவரலாற்றின்
 தொடர்ச்சியாகும்…
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செப்டம்பர் 11, 2017

நாளைய ஜெனிவா கூட்டத்தொடரில் பொன்சேகாவின் போர்க்குற்ற ஆதாரம்!

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் போர்க்குற்ற ஆதார விவகாரத்தை நா மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்கு கொண்டு வரும் நடவடிக்கையில் அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புகள் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றன.
எனவே நாளை ஆரம்பிக்கப்படவுள்ள மனித உரிமைப் பேரவையின் 36வது கூட்டத்தொடரில் இலங்கை பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
இதனால் அனைத்துலக குற்றவியல் விசாரணைப் பொறிமுறைக்குள் இலங்கையை உள்வாங்குவதற்கான அழுத்தங்களும் வலியுறுத்தல்களும் ஏற்படலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 36வது கூட்டத்தொடர் நாளை திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.
ஜெனிவாவிலுள்ள இலங்கை வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தலைமையிலான குழு கூட்டத்தொடரில் கலந்து 
கொள்ளவுள்ளது.
ஆரம்ப நிகழ்வில் ஐநா மனித உரிமைப் பேரவையின் தலைவர் மற்றும் மனித உரிமை ஆணையாளர் ஆகியோர் சிறப்புரை ஆற்றவுள்ளனர்.
இந்தக் கூட்டத்தொடரில் இலங்கையின் விவகாரங்கள் நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கப்படவில்லை.
ஆனால் ஐநாவின் சிறப்பு அந்தஸ்துடைய சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் இலங்கை குறித்து கேள்விகள் எழுப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் 
காணப்படுகின்றன.
பொதுவான விவாதங்களில் பல்வேறு தலைப்புகளின் கீழ் உரையாற்றவுள்ள சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கையின் பொறுப்புக்கூறல், காணாமல்போனோர் மற்றும்
 இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் என பல்வேறு விடயங்கள் குறித்து கேள்விகளை முன்வைத்து அனைத்துலகத்தின் வலியுறுத்தல்களுக்கான சூழலை உருவாக்கலாம் என 
எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இலங்கையில் இருந்து ஜெனிவா செல்லும் மனித உரிமை செயற்பாட்டு பொது அமைப்புகள் உபகுழுக் கூட்டங்களில் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவிக்கவுள்ள நிலையில் இது மிகவும் நெருக்கடியான நிலைமைகளை உருவாக்கக் கூடும் என்றும் 
அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற சர்வதேச அமைப்புகள் இலங்கை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பும் என்றும் கூறப்படுகின்றது.
குறிப்பாக அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தலைமையிலான மனித உரிமை அமைப்புகள் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுக்கு எதிராகப் போர்க்குற்ற வழக்கை 
தாக்கல் செய்துள்ளன.
2007ம் ஆண்டு தொடக்கம் இறுதிக்கட்டப் போர் இடம்பெற்ற 2009ம் ஆண்டு வரை ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய வன்னிப்படைகளின் தளபதியாக செயற்பட்ட நிலையில் வவுனியாவில் உள்ள யோசப் முகாமில் இருந்து இவர் இராணுவ நடவடிக்கையை மேற்பார்வை செய்ததாக போர்க்குற்ற வழக்கில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் 2009ம் ஆண்டு இறுதிக்கட்டப் போரில் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவின் மேற்பார்வையில் இருந்த இராணுவப் பிரிவுகளால் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகவும் காணாமல் ஆக்கப்பட்டதமாகவும் சித்திரவதை
 செய்யப்பட்டதாகவும் இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனவே நாளை திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ள மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இந்த விடயம் தொடர்பில் இலங்கைத் தரப்பினரிடம் கேள்விகள் முன்வைக்கப்படலாம்.
அதேபோன்று ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய இறுதிக்கட்டப் போரில் குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் உள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துகள் அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புகளால் ஜெனிவாவின் கவனத்திற்கு கொண்டு வரப்படலாம் என்ற அச்சம் இலங்கைத் தரப்புக்குள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செப்டம்பர் 10, 2017

இருவர் பொலனறுவையில் உயிரிழப்பு: ஜனாதிபதியின் சகோதரர் கைது!


பொலனறுவையில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலனறுவையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
சகோதரர்கள் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது, அதி சொகுசு வாகனம் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றது.
குறித்த வாகன விபத்தில் பொலனறுவை எதுமல்பிட்டி பகுதியில், வசிக்கும் 48 வயதுடைய ஹேரத், மற்றும் 58 வயதுடைய புத்ததாச எனும் இருவரே உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை 1.20 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்து குறித்த விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரர் லால் சிறிசேன பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
குறித்த வாகனத்தை தானே செலுத்தியதாக ஒப்புக்கொண்ட அவர், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து 
வைக்கப்பட்டுள்ளார்.
அவரை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வரும், பொலனறுவைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செப்டம்பர் 09, 2017

பொலிஸ் அதிகாரி ஒருவர் முல்லைத்தீவில் சடலமாக மீட்பு; ?

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தின் உப பரிசோதகர் ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். குறித்த உப பரிசோதகரது சடலம், பொலிஸ் நிலைய விடுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
சக பொலிஸ் உத்தியோகஸ்தரொருவர் குறித்த பொலிஸ் உப பரிசோதகருக்கு காலை உணவு வழங்குவதற்காக அவரது விடுதிக்குச் சென்றிருந்தபோது குறித்த உப பரிசோதகர் நிலத்தில் விழுந்து கிடப்பதைக் 
கண்டுள்ளார்.
இதையடுத்து உடனடியாக ஏனைய பொலிஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அவரை மாஞ்சோலை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்
எனினும் அவர் ஏற்கனவே அவர் உயிரிழந்திருந்தமை இதன்போது கண்டறியப்பட்டது. உயிரிழந்த நபர் முள்ளியவளை பிரதேசத்தில் உப பரிசோதகராக கடமையாற்றிய டி.எம்.ஜ.பண்டார நாயக்க என கூறப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பொலிஸ் உப பரிசோதகர் சுகயீனம் காரணமாக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு இன்று காலை சென்று வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செப்டம்பர் 05, 2017

யுத்தகளத்தில் நிர்க்கதியான நிலையில் தமிழ்மக்களின் புகைப்படம்!!

இறுதி யுத்தத்தின் போது 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற  பாதிக்கப்பட்டிருந்த பொதுமக்கள் தொடர்பிலான புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன.
இந்த புகைப்படங்களானது இராணுவக்கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி யுத்தம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
அத்துடன், ஆயிரக்கணக்கான பொது மக்கள் நிர்கதியான நிலையில் அகதிகளாக்கப்பட்டிருந்தனர். இவ்வாறான நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவே தற்போது வெளியாகியுள்ளன.
இறுதி யுத்தத்தின் போது கையில் கிடைத்த உடமைகளுடன் பொது மக்கள் மீண்டிருந்த நிலையில், பொதுமக்களிடம் இருந்து இலத்திரினியல் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை இராணுவத்தினர் 
கைப்பற்றியிருந்தனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட பொருட்கள் மீளவும் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அதிலிருந்த கெமரா ஒன்றிலிருந்து இந்த புகைப்படங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>