18

siruppiddy

ஏப்ரல் 25, 2013

இழுத்தடிக்கப்பட்டுவந்த மன்னார் தமிழ்ச்சங்க??



பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது அரக்கப் பரக்க கூடி ஆலோசித்து முடிவெடுத்து ஆடம்பரமாக ஏற்படுத்திய மன்னார் தமிழ்ச்சங்கம் தனது நீண்ட இடைவெளியின் பின்னரான 2வது பொதுக்கூட்டத்தை இன்று வெற்றிகரமாக நடாத்தி முடித்திருந்தது. பொறுத்துப் பொறுத்து பார்த்த பொதுச்சபை உறுப்பினர்கள் அனைவரும் பொங்கிப் பொருமியே சபையினுள் நுழைந்திருந்தனர். முறையே சம்பிராய பூர்வமான ஆரம்பமும், உரைகளும் நடந்தேறின... தனக்கு வரவிருப்பதை அறிந்த சில பதவிநிலை உறுப்பினர்கள் தமது இறுதியுரையை அதில் நிகழ்தியமை மிக ஆக்குரோசமாக அமைந்திருந்தது.

பார்த்துப் பார்த்து செதுக்குவதென்பார்களே... அதுபோல பார்த்து பார்த்து செதுக்கிய தமிழ்ச்சங்க யாப்பு அதை காழ்ப்புடன் உருவாக்கியவர்களுக்கே ஆப்படித்ததாகக் கருதப்படுகின்றது. யாப்பு குறித்து பல சர்ச்சைகள் எழுந்தாலும் பல பெரியமனுசர்கள் பெருந்தன்மையுடன் அதை அடக்கினார்கள். ( Lolz)

பின்னர் முரண்பாடுகளுடன் தொடர்ந்த கூட்டம் தனது நிர்வாக சபை உறுப்பினர்களை திட்டமிட்டபடியே தெரிவு செய்து கொண்டது.

”பழைய கிழவி கதவத் திறடி”... பிசாச விட பேய் பறுவால எண்ட மாதிரி எல்லோரும் ஏகமனதாய் ஏற்றுக் கொண்டனர்... அப்ப பாருங்களன்...

காகமிருக்கப் பனம்பழம் விழுந்தாற்போல தமிழ்ச்சங்கம் நிகழ்த்திய செம்மொழிவிழாப் பெருமை அப்போது பதவி வகித்தவர்களையே சாரும். ஆனால் இன்று உள்ள புதிய பதவி நிலை உறுப்பினர்களுக்கு முன்னால் ஒரு சவால் முன்வைக்கப்படுகின்றது...

அது அவர்கள் செயலாற்றலிலேயே தங்கியுள்ளது...

சிறிது காலத்தில் பலப்பரீட்சையின் ரிசாள்ட்டு வந்து விடும்... செயல் வீரர்கள் தம்மை தமிழ்சங்கத்தால் அடையாளம் காட்டுவார்களா இல்லை தமிழ்ச்சங்கம் அவர்களால் அடையாளப்படுத்தப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக