18

siruppiddy

பிப்ரவரி 02, 2014

சிறுபான்மையினர் உரிமைகளை பெற சிங்களவர்கள் தலையிட?!

இலங்கையின் சிறுபான்மையினர் சுயநிர்ணய உரிமைகளுக்காக தொடர்ந்தும் போராடி வந்தனர் எனவும் அதனை பெற்றுக் கொடுக்கவும் முன்னோக்கி கொண்டு செல்லும் சிங்கள சமூகம் தலையிட வேண்டும் என நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.

கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிறுபான்மை மக்களின் சுயநிர்ணய உரிமையை பெற்றுக் கொடுக்க சிங்கள சமூகம் தலையிடுவதன் ஊடாக உண்மையான சமாதானத்தை உலகத்திற்கு காட்ட முடியும்.
நாங்கள் பாரிய அர்ப்பணிப்புகளை செய்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களின் ஐக்கிய கூட்டணியை கட்டியெழுப்பி உள்ளோம். இதன் மூலம் இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியும்.
1920 ஆம் ஆண்டுகளில் சிலோன் காங்கிரஸ் என்ற ஐக்கிய கூட்டணி கட்டியெழுப்பட்டது. எனினும் அதில் இருந்த சில தமிழ் தலைவர்கள் விலகி சென்றனர்.
சிங்களவர்கள் சிங்கள இனம் பற்றி மட்டுமே பேசிதால் அன்று அருணாச்சலம் அந்த கூட்டணியை விட்டு வெளியேறினார்.
வரலாறு முழுவதும் சிங்களவர்கள் சிங்களவர்களை பற்றி மட்டுமே பேசி வந்ததால், இனப்பிரச்சினை ஏற்பட்டது. இந்த தவறை நாம் திருத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக