18

siruppiddy

பிப்ரவரி 06, 2014

சிறிலங்கா துணை துதுவராலயம் முன்பாக நடைபெற்ற போராட்டம்


கனடிய தமிழர் தேசிய அவை தொடர்ச்சியாக நடத்தி வரும் தொடர் கவன ஈர்ப்பு போராட்ட வரிசையில், மூன்றாம் நாள் கவனஈர்ப்புப் போராட்டம் பெப்ரவரி 4ம் திகதி கடும் குளிரான கால நிலையையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான தமிழர்களால் மிகுந்த எழுச்சியோடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரதான சந்திகளில் ஒன்றான யங் மற்றும் எக்ளிங்டன் சந்திப்பிற்கருகில் 36 எக்ளிங்டன் வீதி மேற்கில் அமைந்துள்ள சிறிலங்கா துணைத் தூதராலயத்திற்கு

 முன்பாக பி. ப. 3.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை எழுச்சி முழக்கங்களுடன் இந்த போராட்டத்தை நடத்தினார்கள். இந்த போராட்ட நிகழ்வில் தமிழினப் படுகொலை குறித்த ஓவியங்களும் பாதையோரத்தில் காட்சிப் படுத்தப்பட்டன. வருகை தந்த மக்கள் கடும் குளிரை பொருட்படுத்தாமல் ஆரம்பம் முதல் இறுதி வரை நின்று போராடி தமது காலக் கடமையை நிறைவேற்றினார்கள். கனடிய தமிழர் தேசிய அவையால் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் உணர்வு மிக்க தமிழ் மக்கள் அமைப்பு பேதங்கள் கடந்து கலந்து தமது வரலாற்று கடமையை

ஆற்றினார்கள். அமைதி வழி போராட்டம் நடத்திய மக்கள் பாதையோர வழியாக நேர்த்தியாக முழக்கங்களை எழுப்பியவாறு அந்த பகுதியை நடை பவனியாகவும் நீண்ட வரிசையில் நடந்து வந்தார்கள். பல்லின சமூகம் பல்லாயிரமாக பயணிக்கும் இந்த பகுதியில் இந்த போராட்டமானது, பல்லின மக்களின் கவனத்தையும் ஆதரவையும் பெருமளவில் பெற்றது. கனடியத் தமிழர் தேசிய அவை தொடர்ச்சியாக நடத்தி வரும் இது போன்ற போராட்டங்களை இனி வரும் காலங்களிலும் நீதி கிடைக்கும் வரை நீதி வேண்டி தொடர்வோம் என்ற உறுதி மொழி எடுக்கப்பட்டு போராட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.






0 கருத்துகள்:

கருத்துரையிடுக