18

siruppiddy

பிப்ரவரி 25, 2014

மனித உரிமை அமைப்புக்களின் நடவடிக்கைக்கு திசர சமரசிங்க

அவுஸ்திரேலிய மனித உரிமை மற்றும் அகதிக் கோரிக்கையாளர் ஆதரவு அமைப்புக்களின் நடவடிக்கைகளுக்கு அந்நாட்டுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திசர சமரசிங்க எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

மனுஸ் தீவுகளில் கடமையாற்றி வரும் இலங்கை படையதிகாரி ஒருவருக்கு எதிராக மனித உரிமை அமைப்புக்கள் கருத்து வெளியிட்டிருந்தன.
எனினும், இவ்வாறு முன்னாள் இராணுவ அதிகாரிக்கு எதிராக கருத்து வெளியிடுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தில் கடமையாற்றியிருந்தார் என்பதற்காக ஒருவரை பணியில் அமர்த்துவதற்கு எதிர்ப்பு வெளியிட முடியாது.
தினேஷ் பெரேரா என்பவர் இலங்கைப் பிரஜையா அல்லது அவுஸ்திரேலிய பிரஜையா என்பதே இன்னமும் தெரியவில்லை.

இலங்கை இராணுவத்தினர் சிறந்த தகுதிகளையும் ஒழுக்கத்தையும் கொண்டவர்கள். மனுஸ் தீவு அகதிக் கோரிக்கையாளர் முகாமில் இலங்கையர் படையதிகாரி கடயைமாற்றுவதில் எவ்வித தவறும் இல்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்கியிருந்த 300,000 அப்பாவி பொதுமக்களை இலங்கைப் படையினரே மீட்டனர்.
தோற்கடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போது பிரிவினைவாதத்தை தூண்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக