18

siruppiddy

ஜூன் 13, 2014

முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன – ஐ.நா

இலங்கையிலிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.

அமைதியாக ஒன்றுகூடல் மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியன தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி மாய்னா கியாய் Maina Kiai இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உதாரணமாக உலகின் பல நாடுகளில் பெண்கள் தங்களது உரிமைகளை உறுதி செய்து கொள்ள மேற்கொள்ளும் போராட்டங்கள் முடக்கப்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை, கம்போடியா, இந்தியா, கியூபா, சி;ம்பாப்வே போன்ற நாடுகளிலிருந்து இவ்வாறான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஒடுக்கப்படுவோர் தங்களது உரிமைகளை வென்றெடுப்பதற்கு குரல் கொடுக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைதியான முறையில் போராட்டங்களை நடாத்துவோர் மீது திட்டமிட்ட வகையில் பல்வேறு வழிகளில் கண்காணிப்பு நடத்தி ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக