18

siruppiddy

அக்டோபர் 14, 2014

நிறைவேற்று அதிகாரத்திற்கும் ஈழக்கோரிக்கைக்கும் என்ன தொடர்பு?

 தனித்தமிழீழ கோரிக்கைக்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என்று மஹிந்தராஜபக்சவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ராஜபக்ச அங்கு இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போது,தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் புலம்பெயர்ந்த சில அமைப்புக்களும் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டால் நிறைவேற்று அதிகார முறைமையை மாற்றுவதற்கு தாம் தயார் எனவும் தொடர்ந்து குரல்கொடுத்து வருவதாகவும் கூறினார்
இது தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்து வெளியிடும் போது ஈழக் கோரிக்கையை முன்வைத்து நிறைவேற்று அதிகாரம் தொடர்பான நெருக்கடியைக் குறைப்பதற்குக் ராஜபக்ச கருதுகின்றார் தமிழ் மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தினரையும் ,சிங்களவர்களையும் ஏமாற்றும் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச கூற்று முறையற்றது .ஜனநாயகத்துக்கு எதிராகவும் அச்சுறுத்தல் மிகுந்ததாகவும் நிறைவேற்று அதிகாரம் செயல்படும் என்றும் இது தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் பிரச்சினையான ஒன்றாகும், சிங்கள மக்களே தெளிவு பெறவேண்டியவர்களாக உள்ளனர் என்று தெரிவித்தார்
மேலும் ராஜபக்ச அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற கருத்துக்கள் பெரும்பான்மை சமூகமான சிங்கள மக்கள் மத்தியிலும் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பாக பௌத்த மதத்தலைவர்கள், எதிர்க்கட்சிகள் ,இடதுசாரி அமைப்புக்கள், போன்றவர்கள் நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதும் தொடர்பிலான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு நாட்டின் ஜனாதிபதி இவ்வாறு கருத்து வெளியிடுவதானது வேடிக்கையாக இருக்கின்றது.  இந்தஅறிக்கையின் உண்மையான நிலை  தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள மக்களை திசை திருப்புவதற்கான முயற்சியாகும் உண்மையில் ஈழக் கோரிக்கைக்கும் நிறைவேற்று அதிகரத்திற்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என தெரிவித்தார்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக