18

siruppiddy

செப்டம்பர் 04, 2015

கன்னி நாடாளுமன்ற உரையை சிங்களத்தில் ஆற்றிய தமிழ் எம்.பி!

ஜனநாயக மக்கள் முன்னணியின் உபதலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலு குமார் தனது கன்னி நாடாளுமன்ற உரையை தனிச் 
சிங்களத்தில் நேற்று 
நிகழ்த்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை எண்ணிக்கையை அதிகரிக்கக் கோரும் பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் உரையாற்றுவதற்கு வேலு குமார் எம்.பிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதன்போதே தனது கன்னி உரையை அவர் சிங்கள மொழியில் நிகழ்த்தியுள்ளார். 20 வருடங்களுக்குப் பின்னர் கண்டி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஒரேயொரு தமிழ்ப் பிரதிநிதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக