18

siruppiddy

ஜனவரி 31, 2014

ஈழத் தமிழர்களுக்கு தீராப்பழியை இந்தியா செய்துவிடக் கூடாது

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் ஐ.நா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் விவாதிக்கப்படவுள்ளது.இந்நிலையில் தீர்மானத்தைத் தோற்கடிக்கும் முயற்சியில் இலங்கை அரசு கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது. இலங்கை அரச பிரதிநிதிகள் உலக நாடுகளுக்குச் சென்று தமக்கு ஆதரவு அளிக்கும் வண்ணம் விநயமாக வேண்டி நிற்கின்றனர். அதேநேரம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற நாடுகள் இலங்கையில் நடந்த இன அழிப்புத் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை...

ஜனவரி 30, 2014

அறிவிப்புஅரச நிறுவனங்களில் தேசிய கொடியை பறக்க விடுமாறு

 இலங்கையின் 66வது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 3 ஆம் 4 ஆம் திகதிகளில் சகல அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை பறக்கவிடுமாறு பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன் அரச நிறுவனங்கள் இயங்கும் கட்டிடங்களை வர்ண கொடிகளினால் அலங்கரிக்குமாறும் அமைச்சின் செயலாளர், அரச நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளார். இலங்கையின் 66 வது சுதந்திர தினம் இம்முறை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில், கேகாலை சுதந்திர...

ஜனவரி 29, 2014

புலிகளுக்கு எதிராக சட்டவிரோத ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சட்டவிரோத ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.2009ம் ஆண்டு இறுதிக் கட்ட போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கம் சட்டவிரோத ஆயுதங்கள் எதனையும் பயன்படுத்தவில்லை என தெரிவித்துள்ளது, 25 ஆண்டு கால பயங்கரவாத இல்லாதொழிப்பு நடவடிக்கைகளின் போது இராணுவத்தினர் சட்டவிரோத ஆயுதங்களை பயன்படுத்தியதில்லை என குறிப்பிட்டுள்ளது,இலங்கை அரசாங்கப்படையினர் இரசாயன மற்றும் கொத்தணி குண்டுகளை பயன்படுத்தியதாக...

ஜனவரி 12, 2014

டக்ளஸ் - சங்கரி வடக்கில் இணைந்து புதிய கூட்டணி! –

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிக்க இணைகின்றனர். வடக்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிராக பலமான கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பாக தமிழ்க்கட்சிகள் சில யாழ்ப்பாணத்தில் நேற்று கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளன. இந்த கலந்துரையாடலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, சிறீடெலோ சார்பில் அதன் செயலாளர் உதயராசா மற்றும் யாழ்.மாவட்ட அமைப்பாளர் செந்தூரன்,...

ஜனவரி 09, 2014

13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் முழுமையாக

இலங்கை – இந்திய உடன்படிக்கைக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் எனவும் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் இலங்கையில் வாழும் தமிழர்கள் உட்பட சிறுபான்மை மக்கள் கண்ணியமாகவும் கௌரவமாகவும் வாழ்வாதற்காக உறுதிப்பாடுகளை இந்தியா மேற்கொண்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை...

ஜனவரி 08, 2014

மனித வெடிகுண்டாக செயல்பட வந்த 10 வயது சிறுமி மீட்பு

  ஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த இருந்த சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் சிறுவர், சிறுமிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் சிறுமி, தன் மீது பொறுத்தியிருந்து வெடிகுண்டை வெடிக்கச் செய்வதற்கு முன்பாக காப்பாற்றப்பட்டதாக உள்துறை அமைச்சம் தகவல் வெளியிட்டுள்ளது. வெடிகுண்டை வெடிக்க சிறுமியின் அண்ணனால் திட்டம் தீட்டப்பட்டுள்ளது...

ஜனவரி 07, 2014

கடவுள்களால் துரத்தப்படும் சாத்தான்கள்

 ஈழத் தமிழினத்தின்மீதான இன அழிப்புக் குற்றவாளிகள் ஓட, ஓட விரட்டப்படுகின்றார்கள். ஈழப் போரின் இறுதிக் கணம்வரை கொல்லப்பட்டவர்களால், இந்த இன அழிப்புக்குக் காரணமானவர்கள் நிம்மதி இழந்து தவித்துக்கொண்டிருக்கின்றார்கள். முதலாவது நேரடிக் குற்றவாளிகளான ராஜபக்சே சகோதரர்கள் இன அழிப்புப் போர்க் குற்றச்சாட்டிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக கால்படாத நாடுகளுக்கெல்லாம் காவடி எடுத்துக்கொண்டு செல்கின்றார்கள். தாங்கள் தப்பிக் கொள்வதற்காக, என்ன விலை கொடுக்கவும்,...