18

siruppiddy

ஜனவரி 08, 2014

மனித வெடிகுண்டாக செயல்பட வந்த 10 வயது சிறுமி மீட்பு

  
ஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த இருந்த சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் சிறுவர், சிறுமிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் சிறுமி, தன் மீது பொறுத்தியிருந்து வெடிகுண்டை வெடிக்கச் செய்வதற்கு முன்பாக காப்பாற்றப்பட்டதாக உள்துறை அமைச்சம் தகவல் வெளியிட்டுள்ளது.
வெடிகுண்டை வெடிக்க சிறுமியின் அண்ணனால் திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்றும், சிறுமியின் அண்ணன் தலிபான் இயக்கத்தின் முக்கிய கமாண்டராக உள்ளான் என்று உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மிகவும் குழப்பமான மனநிலையில் காணப்பட்ட அப்பெண்ணை பாதுகாப்பு படையினர் சமாதானப்படுத்தி, அவளை சகஜ நிலைக்கு கொண்டு வந்து பேராபத்திலிருந்து அவளையும், பொதுமக்களையும் காப்பாற்றியுள்ளனர்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக