18

siruppiddy

மார்ச் 19, 2014

மாணவர்கள் போராட்டம்; பொலிஸார் கண்ணீர்ப்புகை

 இலவச கல்வியை அழித்தல், மாணவர்களை ஒடுக்குதல் உள்ளிட்ட அடக்குமுறைச் சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய களனி பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்துள்ளனர்.

இதனால் கொழும்பு – கோட்டை பகுதியில் பதற்றம் நிலவுவதுடன் பாரிய போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

இலவச கல்வியை அழித்தல், மாணவர்களை ஒடுக்குதல் உள்ளிட்ட அடக்குமுறை செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் இந்த ஆர்ப்பாட்ட பேரணியை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக