18

siruppiddy

மார்ச் 06, 2014

ஜெயதிலக சீற்றம் சிறந்த வாய்ப்பை நழுவவிட்டு விட்டார் பீரிஸ்!

 ஜெனீவாவில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று நிகழ்த்திய உரை மனிதஉரிமைகள் பேரவையில், இலங்கைக்கு வாக்குகளை தேடித் தருவதற்குப் பதிலாக, ஆதரவாக வாக்களிக்கவிருந்தவர்களையும், எதிராக வாக்களிக்க தூண்டும் வகையில் இருந்ததாக இலங்கையின் மூத்த இராஜதந்திரி தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளிநாட்டு பத்திரிகை ஒன்றில்,எழுதியுள்ள தயான் ஜெயதிலக, அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் உரை, மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு வாக்குகளை தேடித் தருவதற்க பதிலாக, ஆதரவாக வாக்களிக்கவிருந்தவர்களையும், எதிராக வாக்களிக்க தூண்டும் வகையில் இருந்தது

இலங்கை ஜெனீவா மாநாட்டில் மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் இன்றைய உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஆனால் அவர் ஏற்கனவே எழுதி வைத்த குறிப்பினை பக்கம் பக்கமாக வாசித்து முடித்தாரே தவிர,

இலங்கை மீது குற்றங்கள் இல்லை என்பதை அழுத்தமாக கூறத் தவறிவிட்டார். அத்துடன் அவர் தமது உரையின் போது சபையில் இருந்துவர்களை நிமிர்ந்து பார்க்க வைக்கவோ, தாம் கூறும் விடயங்களுக்கு முகத்திலும், உடலசைவிலும் பாவனைகள் செய்யவோ இல்லாமல், உயிரோட்டம் இல்லாத உரை ஒன்றையே நிகழ்த்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனால் இலங்கை அரசாங்கம் சிறந்த ஒரு வாய்ப்பை நழுவவிட்டிருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தி இருக்கிறார்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக