18

siruppiddy

ஏப்ரல் 03, 2014

ஆதரவு அமைப்புக்களினால் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் பங்கேற்க முடியாது!

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களினால் எதிர்காலத்தில் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் பங்கேற்க முடியாது என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட ஆறு புலிகளுக்கு ஆதரவான வெளிநாட்டு தமிழ் அமைப்புக்களினால் மாநாட்டில் பங்கேற்க முடியாது.

பிரிட்டன் தமிழர் பேரவை,  உலகத் தமிழர் பேரவை, கனேடிய தமிழர் காங்கிரஸ் உள்ளிட்ட வெளிநாட்டு தமிழ் அமைப்புக்கள் மனித உரிமைப் பேரவை மாநாடுகளில் பங்கேற்று வந்தன.

எனினும், இலங்கையில் குறித்த அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்ட காரணத்தினால் மனித உரிமை பேரவை மாநாடுகளில் எதிர்காலத்தில் இந்த அமைப்புக்களினால் பங்கேற்க முடியாது என அந்த சிங்களப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த அமைப்புக்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் தொடர்புகளை பேணச் சந்தர்ப்பம் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக