18

siruppiddy

ஏப்ரல் 16, 2014

நாட்டை பிரிக்கும் தேவை தமிழ் மக்களுக்கு இல்லை:

நாட்டிற்குள் மீண்டும் ஆயுதப் போராட்டம் ஒன்றை ஏற்படுத்தும் எந்த தேவையும் தமிழ் மக்களுக்கு இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நாட்டை பிரிக்கும் எந்த தேவையும் தமிழ் மக்களுக்கு கிடையாது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தமிழ் மக்களின் உரிமைகளை பெறுவதற்காக கூட்டமைப்பு தொடர்ந்தும் தனது நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எனவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக