18

siruppiddy

ஏப்ரல் 08, 2014

காட்டுப் பகுதியில் அழுகிய சடலமாக மீட்பு:

 மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூரில், தனது வீட்டிலிருந்து சென்று கடந்த மூன்று தினங்களாக காணாமல்போனவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் வேற்றுச்சேனையில் உள்ள காட்டுப்பகுதியில் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் அழுகிய சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டவர் மண்டூரினை சேர்ந்த வைரமுத்து சந்திரசேகரம் (65வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மீட்கப்பட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இது தொடர்பிலான விசாரணையை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக