18

siruppiddy

ஏப்ரல் 11, 2014

சமகால அரசியல் நிலைவரம் குறித்தான நிகழ்வு

 பிரான்சில் புலம்பெயர் தமிழர்கள் அமைப்புக்கள் தொடர்பில் தனது வர்த்தகமானி அறிவித்தல் ஊடாக புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தி வரும் சிறிலங்கா அரசாங்கம், மீண்டும் புலிகள் என்ற கட்டுக்கதைகளுடன் தாயக மக்களையும் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருகின்றது.

இந்நிலையில் தாயகத்தினையும் புலத்தினையும் மையப்படுத்தி சமகால அரசியல் நிலைவரம் குறித்தான கருத்தாடல் நிகழ்வொன்று, பிரான்சில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்களுக்கான அமைச்சு அறிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைச்சபை தீர்மானமும் தமிழர் தரப்பின் நிலைப்பாடு, சிறிலங்காவின் வர்த்தகமானி அறிவித்தலும் அதறக்கு எதிரான தமிழர்களின் முன்னகர்வு, உட்பட இலங்கைத்தீவினை மையப்படுத்திய சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

வரும் 13/04/2014 ஞாயிற்றுக்கிழமை 4-6 Place de le Rapublique,93100 Montreuil ( Metro : Robespierre – Ligne 9) எனும் இடத்தில் மாலை 18:00 மணிக்கு இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் செயற்பாட்டாளர்கள் ஆர்வலர்கள் என அனைவரையும் பங்கெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக