18

siruppiddy

ஜனவரி 07, 2015

பிரசார கூட்டத்தில் தமிழனே வெளியே போ: ராஜபக்சே ஆவேசம்

இலங்கை மட்டக்களப்பில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழர்களை மகிந்த ராஜபக்சே மிரட்டியது தெரிய வந்துள்ளது. மட்டக்களப்பு கூட்டத்தில் ராஜபக்சே பேசிக் கொண்டிருந்த போது மக்கள் மத்தியில் திடீர் சலசலப்பு எழுந்தது.
இது ராஜபக்சேவை கோபம் அடையச் செய்தது. பிரசாரத்தை நிறுத்திய அவர் மைக்கில், ‘‘இது சிங்கள நாடு. நானும் சிங்களன்தான். தமிழா கேட்டுக் கொண்டிரு. முடியா விட்டால் வெளியே போ’’ என்று ஆவேசமாக கூறினார். இதனால் கூட்டத்தில் இருந்த தமிழர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக