18

siruppiddy

ஜனவரி 05, 2015

திருமலையில் தேர்தல்கள் ஆணையாளரின் பிரதிநிதி மீது தாக்குதல்

கடமைக்காகச் சென்ற தேர்தல்கள் ஆணையாளரின் பிரதிநிதி மீது திருகோணமலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சட்டவிரோத தேர்தல் பிரச்சாரம் இடம்பெறுவதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து விசாரணை செய்யச் சென்ற நபர் மீதே நேற்று (04) இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த தேர்தல்கள் ஆணையாளரின் பிரதிநிதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்தப்பட்ட போது பொலிஸ் உத்தியோகத்தரும் அவ்விடத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக