18

siruppiddy

நவம்பர் 12, 2013

தாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு கனடிய தமிழர்கள் தார்மீக ஆதரவு.


 கொழும்பில் பொதுநலவாய உச்சி மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் வடகிழக்கில் பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பட்டங்களை நடாத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
புலம்பெயர் நாடுகளிலும் தமிழ்நாட்டிலும் உள்ள தமிழர்களும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தார்மீக ஆதரவு வழங்கும் முகமாக தொடர் எழுச்சி ஆர்ப்பாட்டங்கள் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
இராணுவ மயப்படுத்தல், இனஅழிப்பு, நிலஅபகரிப்பு, காணாமல் போனவர்களின் விடயங்கள், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டவர்களின் விடயங்கள், மற்றும் பெண்களிற்கு எதிரான பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட விடயங்களை கண்டித்தும், சர்வதேச போர்குற்ற விசாரணையை வலியுறுத்தியும்
 வரும் நவம்பர் 14 ஆம் திகதி வியாழக்கிழமை,
டொராண்டோவில் உள்ள ஸ்ரீலங்கா துணை தூதரகத்தின் முன்பாக (36 Eglinton Ave. West, Toronto, Intersection Eglinton & Yonge)
பிற்பகல் 3.30 மணியிலிருந்து 6.30 மணிவரை ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை அனைத்து கனடிய தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து ஒழுங்கு செய்துள்ளனர்.
இம்முக்கியமான கட்டத்தில் இந்த ஆர்பாட்டதிற்கு அனைத்து கனடிய தமிழர்களும் வருகை தந்து தங்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
 "இனப்படுகொலைகளின் தலைவன் மகிந்த பொது நலவாய நாடுகளின் தலைவனா?" முடிவு காண; வாரீர் அணி திரண்டு!!!
தொடர்புகளுக்கு,
கனடிய தமிழர் அமைப்புகள்-
416-888-1128 , நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.
416-281-1165 . தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – கனடா
416-240-0078 , கனடியத் தமிழ் காங்கிரஸ்
416-917-8951 , நாம் தமிழர் - கனடா
416-402-9393 , கனடாத் தமிழர் இணையம்
 மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து வசதிகள் உள்ளன. பதிவு செய்வோருக்கு மட்டும். அதனால் ஆசனப் பதிவிற்கு முந்திக் கொள்ளுங்கள். 647 209 4100 , 416 240 0078

0 கருத்துகள்:

கருத்துரையிடுக