18

siruppiddy

டிசம்பர் 09, 2013

அபிலாசையை சாதகமாக பரிசிலீப்போம் - கனடிய மனிதவுரிமை

 கனடிய மனிதவுரிமை மையம் கனடிய அரசு நிறுவனங்களினுடன் இணைந்து ஏனைய நாடுகளில் இடம்பெறும் மனிதவுரிமை விவகாரங்கள் தொடர்பான விடயங்களிலும் பங்களிக்க வேண்டுமென கனடியப் பிரதமர் விடுத்த வேண்டுகோளை தாங்கள் 2014ம் ஆண்டிற்கான முக்கிய திட்டமாகப் பரிசீலிக்கவுள்ளதாக கனடிய மனிதவுரிமை மையம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பான விடயங்களை கனடிய அரசிற்கும் கனடாவின் இதர கட்சிகளிற்கும் துறைசார் நிபுணத்துவத்துடன் எடுத்தியம்பி வரும் கனடடிய மனிதவுரிமை மையம் 2013ம் வருட இறுதிக்கான அரசியலாளர்களுடனான ஒன்றுகூடலை டிசம்பர் 6ம் திகதி வெள்ளிக்கிழமை நடத்தியிருந்தது.

இதன்போதே கனடியப் பிரதமர் கடந்த சில மாதங்களிற்கு முன்னர் கனடிய மனிதவுரிமை மையத்திற்கு வழங்கியிருந்த வாழ்த்துச் செய்தியில், கனடிய மனிதவுரிமை மையமானது ஏனைய நாடுகளில் இடம்பெறும் பிரச்சினைகள் தொடர்பான விவகாரங்களில் கனடிய அரச நிறுவனங்களுடன் இணைந்து பங்காளராகப் பணியாற்ற வேண்டும் என்ற கனடியப் பிரதமரின் அபிலாசையை செயற்திட்டமாக்குவது என்ற முடிவு வெளியிடப்பட்டது.

ஈழத்தமிழர் விவகாரத்தை நுட்பத்துடன் கையாளும் கனடிய மனிதவுரிமை மையத்தின் செயற்பாட்டாளர்களாக கனடிய தேசிய நீரோட்டத்தை சேர்ந்த பலர் பணியாற்றி வருவதும், கனடிய மனிதவுரிமை மையத்தின் நிகழ்வுகளிற்கே அதிகளவில் கனடிய அரசியலாளர்கள் ரொறன்ரோ மாநகரிற்கு வந்து பங்கு கொள்வதும் இடம்பெற்று வருகிறது.

கனடியப் தமிழர்களிடம் அமைப்பு ரீதியாக அணுகக்கூடிய ஒரு நடுநிலைக் கட்டமைப்பாக அடையாளம் காணப்பட்டுள்ள கனடிய மனிதவுரிமை மையத்தினை, கனடாவின் ஆளும் கட்சி கனடியப் பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் பங்குகொள்வது உகந்ததா இல்லையா என்பதைக் கண்டறியும் கருத்துக் கணிப்பை நடத்தும் பணியை ஒப்படைத்தபோது கனடிய மனிதவுரிமை அதனை நேர்த்தியாகவும் அனுபவ முதிர்ச்சியுடனும் கையாண்ட விதம் இந்த அமைப்பு மீது அரசியலாளர்களிற்கிருந்த மதிப்பை உயர்த்தியிருந்தது.

2014ம் ஆண்டில் கனடியத் தமிழ் அமைப்புக்களின் சகல பிரதிநிதிகளையும் மற்றும் சிறந்த துறைசார் வல்லுனர்களையும் இணைத்த குழுவொன்றை உருவாக்கி அவர்களை இலங்கை விவகாரங்கள் தொடர்பான மற்றும் கனடாவில் வாழும் தமிழ் மக்களிற்கான அரசு சார்ந்த முன்னெடுப்புக்களை மேற்கொள்ளும் ஒரு குழுவாக செயலாற்ற வைப்பதென்றும்,
2014ம் ஆண்டில் கனடிய மனிதவுரிமை மையம் தங்களது சேவைகளை ஏனைய நாடுகள் சார்ந்த விடங்களிலும் ஈடுபடுத்துவதென்றும் இந்த தேவைகளிற்காக ஏனைய நாடுகளிலுள்ள மனிதவுரிமை விரும்பிகளையும் தங்களுடன் இணைத்து கொள்வதென்றும் கனடிய மனிதவுரிமை முடிவு செய்துள்ளது.
இந்த விவகாரத்தில் தங்களுடன் இணைந்து செயலாற்ற விரும்பும் ஏனைய நாடுகளிலுள்ள அமைப்புக்களையும், துறைசார் நிபுணர்கள் மற்றும் தனிநபர்களையும் info@chrv.ca என்ற முகவரியினூடாக தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு கனடிய மனிதவுரிமை வேண்டி நிற்கிறது







0 கருத்துகள்:

கருத்துரையிடுக