18

siruppiddy

டிசம்பர் 10, 2013

கறுப்பு நட்சத்திரம் விடை பெற்றுச் சென்றது: -

விடுதலை வானின் கறுப்பு நட்சத்திரம் விடை பெற்றுச் சென்றது: - ஆயினும் நம்பிக்கை ஓளியினை நமது கைகளியே தந்துவிட்டுச் சென்றது.
ஆம்! உலகப்போக்குளைப் புரட்டிப் போட்டு, நாம் வாழும் காலத்திலேயே, ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களின் விடுதலையை நம் கண்முன்னேநனவாக்கிக் காட்டிய மாபெரும் தலைவர் நெல்சன் மன்டெலா அவர்கள் நம்மிடமிருந்து விடை பெற்றுச் சென்றுள்ளார். உலகெங்கும்

விடுதலைக்காகப் போராடும் ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக அவர் திகழ்ந்தார். தென்னாபிரிக்காவில் தங்கள் சொந்தத் தாய்மண்ணிலேயே இனவெறிபிடித்த சிறுபான்மை காலனித்துவவாதிகளின் (ஆப்ரிகனர்)

அரசினால் இனஒடுக்குதலுக்கும், உரிமை மறுப்புகளுக்கும் உள்ளாகி கறுப்பின மக்கள் பெரும் அவலவாழ்வில் வீழ்ந்து கிடந்தபோது, அவர்களை நிமிர்ந்து எழச்செய்து ஒன்றிணைத்துப் போராடி விடுதலையைப் பெற்றுத்தந்த பெருமை நெல்சன் மன்டெலா அவர்களையே சேரும்.
   
அறவழிப்போராட்டமாகவும், ஆயுதவழிப் போராட்டமாகவும் காலத்தின் தேவைக்கு ஏற்ப போராட்ட வழிமுறைகளை மாற்றிக்கொண்டும் போராட்ட இலக்கினில் இருந்து என்றும் விலகிடாமல் விடுதலையை நோக்கி வழிநடத்திச் சென்றவர். விடுதலைக்கு விலையாக தன் வாழ்வின்

பெரும்பகுதியை, 27 ஆண்டுகளை, கொடும் சிறையில் கழிக்க வேண்டியிருந்தது. பயங்கரவாத முத்திரை இவர் மீதும் குத்தப்பட்டது. ஆனால் அவர்;;; ஓய்ந்து விடவில்லை. தென்னாபிரக்க இனவெறிபிடித்த காலனித்துவவாதிகளின் (ஆப்ரிகனர்) அரசினை சர்வதேச நாடுகளிலிருந்து தனிமைப்படுத்தும்

முயற்சியில் வெற்றியும் பெற்றார். சிறையில் இருந்து விடுதலை பெறுவதற்காக மன்னிப்புக் கேட்கச் சொல்லி காலனித்துவ (ஆப்ரிகனர்) அரசு வற்புறுத்திய போது தனது உயிரைவிட இலட்சிய உறுதியே பெரிதெனக் கருதி அதனை மறுத்துவிட்டார்.

நெல்சன் மன்டெலா அவர்களது வாழ்வனுபவ ஏட்டில் இருந்து கற்றுக் கொள்வதற்கு விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு நிறையப் பாடங்கள் இருக்கின்றன. அந்த அனுபவங்களை எங்கள் விடுதலைக்கான உரமாக்கிக் கொண்டு எமது தேசவிடுதலையை வென்றெடுப்பது தான் அவருக்கு நாம்அளிக்கும் அஞ்சலியாக நாம் கருதுகின்றோம்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக