18

siruppiddy

செப்டம்பர் 19, 2014

அழுத்தங்களைச் சமாளிக்க சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை

தமிழ் நாட்டின் அழுத்தங்களை சமாளிப்பதற்காக, இறுதி நேரத்தில் தமிழ் நாட்டு மீனவர்கள் மற்றும் ஈழத் தமிழர்கள் தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்றை சிறிலங்கா அரசாங்கத்துடன் பாரதீயே ஜனதா கட்சி ஏற்பாடு செய்திருக்கிறது.
கொழும்பில் நடைபெறும் ஆசிய அரசியல் கட்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாரதீயே ஜனதா கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் சிறிலங்கா வந்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் தமிழ் நாட்டுக்கு பொறுப்பாக இருக்கும் முரளிதர் ராவோ  ஒருவர்.
இதற்கு எதிராக தமிழ் நாட்டில் தற்போது எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.
இதனை சமாளிப்பதற்காக இறுதி நேரத்தில் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சருக்கும், முரளிதரராவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தி அதனை இந்தியாவில் பிரபல்யப்படுத்தி வருகிறது.
இது தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக