18

siruppiddy

செப்டம்பர் 28, 2014

மோடி கூட்டமைப்புடன் பேசிய விடயங்கள் மகிந்த ராஜபக்சவுக்கு கூறியுள்ளார்

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசிய விடயங்களை சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி அறியப்படுத்தியதாக சிறிலங்கா ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 
நரேந்திரமோடிக்கும், மகிந்தராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இரவு நியுயோர்க்கில் வைத்து நடைபெற்றிருந்தது. 
இதன் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு தம்மை சந்தித்து முன்வைத்த விடயங்களை ஜனாதிபதியிடம் நரேந்திர மோடி கூறியுள்ளார். 
அத்துடன், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் ஊடாக அரசியல் தீர்வினை காண்பதற்கு தாம் நடவடிக்கை எடுத்துவருதாகவும், இதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் சிறிலங்காவின் ஜனாதிபதி, நரேந்திர மோடியிடம் தெரிவித்துள்ளார்.
நரேந்திரமோடியும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் முக்கியத்துவத்தை புரிந்துக் கொண்டிருப்பதாக சிறிலங்கா ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
எனினும் இது தொடர்பில் இந்திய அரசாங்கத்தினால் இன்னும் ஊடக அறிக்கைகள் எவையும் வெளியிடப்படவில்லை.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக