18

siruppiddy

அக்டோபர் 27, 2014

கைதுசெய்யப்பட்ட நபரின் விடயத்தில் ஐ.நா தலையிட வேண்டும்

ஐ.நா. விசாரணைக் குழுவிடம் சாட்சியமளிப்பதற்கான படிவங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள 57 வயதுடைய சின்னத்தம்பி கிருஷ்ணராஜாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அதேவேளை இந்த விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தலையீடு செய்து சாட்சிகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. கிளிநொச்சி,...

அக்டோபர் 25, 2014

வீடொன்றில் தோட்டக்களுடன் துப்பாக்கி மீட்பு

தெஹிவளை கவுடான பிரதேசத்தில் தோட்டக்களுடன் துப்பாக்கி ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். தமக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இந்த துப்பாக்கியும் தோட்டக்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை. தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்...

அக்டோபர் 21, 2014

பாகம்-2 யுத்தத்தின் கடைசிகட்ட நாட்களில் தலைவர் பிரபாகரன் தளபதிகளுடன் நடந்த சந்திப்பு பற்றி, கசிந்த ஓர் சுவாரசியமான தகல்..!!-

  நமக்கு தகவல் கொடுத்தவர் தொடர்ந்து பேசவிடாமல் விடுதலைப் புலிகளின் தளபதி ஜெயம் கையைப் பிடித்து தடுப்பதை கவனித்த பிரபாகரன், “அவரை தடுக்க வேண்டாம்” என்றார். “நீங்கள் சொன்ன விஷயத்தை வேறு சிலரும் சொன்னார்கள். ஆனால், நாம் மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கிறோம். இந்த நேரத்தில் ஒற்றுமைதான் முக்கியம். எமக்கு சர்வதேசத்தின் உதவி தேவை. அப்படியொரு உதவி கிடைக்கும் என்பதற்கு சமிக்கைகள் கிடைத்துள்ளன. இந்த நேரத்தில் ஒவ்வொருவரும் தத்தமது இஷ்டத்துக்கு ஓட...

பாகம்-1 யுத்தத்தின் கடைசிகட்ட நாட்களில்தலைவர் பிரபாகரன், தளபதி ஜெயத்துடன் நடந்த சந்திப்பு பற்றி கசிந்த ஓர் சுவாரசியமான தகல்

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் தரப்பில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றிய தகவல்கள் தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருகின்றன. 2009-ம் ஆண்டு மே மாதம் ஆரம்பத்தில் இருந்து சிறிய பகுதியான முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகள் இயக்கம் முடங்கிய நிலையில், இலங்கை ராணுவம் அவர்களை முற்றுகையிட்டிருந்தது. மே 2-வது வாரத்தில், அந்த முற்றுகையை உடைத்துக் கொண்டு பிரபாகரனை வெளியே கொண்டுசெல்ல சில...

அக்டோபர் 20, 2014

மக்ளுக்கான தன்னிலைத் தீர்வுரிமை

தமிழ் மக்ளுக்கான இன்றைய தேவையான தனியரசையும் அதன் சாத்தியப்பாடுகள்,இடையூறுகள் என கொஞ்சம் அகலப்பார்வையுடன் அலசிப்பார்ப்போம் ஓர் முழமையான தேசிய இனமான நாம் நவீன தேசமாக வளர எமது சொந்தத் தேசிய அரசை அமைக்க வேண்டியது இன்றியமையாததாகும். தேசிய அரசு இன்றி மொழி,இலக்கியம்,ஏனைய இதர துறைகளிலிருந்து வளர்ச்சி அடையமுடியாது மாறாக சொந்த மக்களாலேயே புறக்கணித்து ஒதுக்கப்படும் நிலையே காணப்படும் இதுவே இன்றைய தம்ழரின் நிலை இதில் மாறுபாடான கருத்துக்கள் இருக்கமுடியாது. ஈழத்தில்...

அக்டோபர் 19, 2014

ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதற்கு மகிந்த தகுதி இல்லை -

 மஹிந்த ராஜபக்ஷவுக்கு மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்டரீதியான தகுதி இல்லை என்று பிரபல சட்டநிபுணர்கள் முன்வைத்துள்ள கருத்தினை தேர்தல்கள் ஆணையாளரிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறுகின்றது. மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவை ஆட்சிக்கு வந்த பின்னர் 18ம் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. அவுஸ்திரேலிய சட்டநிபுணர் ஒருவருடன் இலங்கையின் சட்டநிபுணர்கள் கொழும்பில் நேற்று சனிக்கிழமை மாலை நடத்திய கலந்தாய்விலேயே இந்தக்கருத்துக்கள்...

அக்டோபர் 14, 2014

நிறைவேற்று அதிகாரத்திற்கும் ஈழக்கோரிக்கைக்கும் என்ன தொடர்பு?

 தனித்தமிழீழ கோரிக்கைக்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என்று மஹிந்தராஜபக்சவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ராஜபக்ச அங்கு இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போது,தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் புலம்பெயர்ந்த சில அமைப்புக்களும் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டால் நிறைவேற்று அதிகார முறைமையை மாற்றுவதற்கு தாம் தயார் எனவும் தொடர்ந்து குரல்கொடுத்து வருவதாகவும் கூறினார் இது தொடர்பில்...

அக்டோபர் 12, 2014

ஜனாதிபதி நிறைவேற்று அதிகார முறையை ரத்து செய்கிறேன் ஈழக் கோரிக்கையை கைவிடுங்கள்,

 ஈழக் கோரிக்கையை கைவிட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் தமிழர்களின் ஒரு தொகுதியினரும் தமிழீழ கோரிக்கையை தொடர்ந்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பும் புலம்பெயர் தமிழர்களும் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர்...

அக்டோபர் 09, 2014

தொடர்ந்தும் இலங்கையில் சித்திரவதைகள் - ப்ரீடம் ப்ரம் டோச்சர்

 பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சித்திரவதையில் இருந்து விடுதலை  ( ப்ரீடம் ப்ரம் டோச்சர் )  என்ற அமைப்பு இலங்கையில் தொடர்ந்தும் சித்திரவதைகள் இடம்பெறுவதாக குற்றம் சுமத்தியுள்ளது. அமைப்பின் தலைவர் ஜூலியட் கொஹென் ஜெனீவா மனித உரிமைகள் குழுவின் அமர்வில் நேற்று பங்கேற்றபோது இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். எனினும் இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் கரிசனை கொள்ளாது இருந்து வருவதாக அவர் குற்றம் சுமத்தினார். இலங்கையில் தொடரும் பாலியல்...

அக்டோபர் 05, 2014

சிறையில் கொல்லப்பட்ட தில்ருக்ஷனின் வழக்கை விசாரிக்க அனுமதி

இலங்கையில் 2012-ம் ஆண்டு வவுனியா சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களின் போது கொல்லப்பட்ட மரியதாஸ் தில்ருக்ஷன் எனும் கைதியின் மரணம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரிப்பதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த வழக்கை ஏற்கக்கூடாது என்று அரச தரப்பினால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகளை நீதிமன்றம் நிராகரித்தது. மரியதாஸ் தில்ருக்ஷனின் பெற்றோர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவை விசாரிப்பதற்கு, பிரியசாத் டெப் உள்ளிட்ட மூவர்...

அக்டோபர் 01, 2014

தனது கடும் நிலைப்பாட்டை அமெரிக்கா தளர்த்தியுள்ளது

 இலங்கை தொடர்பான தனது கடும் நிலைப்பாட்டை அமெரிக்கா தளர்த்தியுள்ளதாக தான் உணர்ந்துள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரியுடனான சந்திப்பின்போது இதனை தான் உணர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜோன் கெரியுடனும், இந்திய பிரமருடனும் மேற்கொண்ட பேச்சுக்கள் பயனள்ளதாக அமைந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் அரசாங்கம் தமிழ்தேசிய கூட்டமைப்பிடம் பேசவேண்டும் என்ற...