18

siruppiddy

நவம்பர் 21, 2014

அரசுக்கு அதிர்ச்சி கொடுக்கத் தயாராகும் அமைச்சர்கள்!

நாடாளுமன்றில் இன்று கட்சித் தாவல் அரங்கேறும்? ஆளுங்கட்சியின் முக்கிய அமைச்சர்கள் பலர் இன்று நாடாளுமன்ற அமர்வின் போது கட்சி தாவி, அரசாங்கத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று வசந்த சேனநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டதையடுத்து, இன்று முக்கியமான கட்சி தாவல் நடவடிக்கைக்கு ஆளுங்கட்சியினர் தயாராகி வருகின்றனர். இதனை அறிந்து கொண்ட அரசாங்கத் தரப்பு உயர்மட்டத்தினர், கட்சி தாவும் முடிவில் உள்ள ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களுடன் நேற்றிரவு பல சுற்றுப் பேச்சுகளை நடத்தியுள்ளனர்.
முக்கியமான பதவிகள் தருவதாகவும் இவர்களுக்கு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் அரசாங்கத்தின் உயர்மட்டத்தினர் மீதான அதிருப்தி காரணமாக இன்று மேற்கொள்ளப்படவுள்ள தமது கட்சி தாவல் தீர்மானத்தில் குறித்த முக்கியஸ்தர்கள் உறுதியாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து வரவு-செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான நாடாளுமன்ற அமர்வில் குழப்பங்களை ஏற்படுத்தி, நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைக்கும் முடிவை அரசாங்கம் தற்போது பரிசீலித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக