18

siruppiddy

பிப்ரவரி 13, 2015

விசாரணை சர்வதேச தரத்தைக் கொண்டிருக்க வேண்டும்!

சிறிலங்காவின் உள்ளக விசாரணைகள் சர்வதேசத் தரத்தைக் கொண்டதாக அமைய வேண்டும் என்பதில், ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் ஸ்ரீவன் டுஜாரிக் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் ஜனநாயகம், அமைதி மற்றும் பொறுப்புக் கூறுதல் செயற்பாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை ஒத்துழைக்கும்.
இந்த விடயத்தின் அடிப்படையிலேயே மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகளும் இடம்பெற்று வருகிறது.
இதற்கு சிறிலங்கா ஒத்துழைக்க வேண்டும் என்று முன்தாகவே ஐக்கிய நாடுகளின் பொது செயலளர் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும் சிறிலங்கா உள்நாட்டு விசாரணைகளை மேற்கொள்ளும் பட்சத்தில், அது சர்வதேச தரத்தை கொண்டதாக அமைய வேண்டும் என்றும் அவர் உறுதியாக இருப்பதாக பேச்சாளர் கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக