18

siruppiddy

பிப்ரவரி 25, 2015

கையெழுத்துப் போராட்டத்த ஆரம்பித்து ஆயர்!

தமிழ் சிவில் சமூக அமையத்தின் கையெழுத்துப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தார் மன்னார் ஆயர்! 
இலங்கை மீதான ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டதைக் கண்டித்து, தமிழ் சிவில் சமூக அமையம் நேற்று கையெழுத்துப் பெறும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.முதலாவது கையெழுத்தை இட்டு மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையகத்தி
ன் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டதற்கு எதிர்ப்பும் கவலையும்
தெரிவித்தும்,  ஐ.நாவின்விசாரணைக் குழு இலங்
கைக்கு நேரடியாக வந்து விசாரணைகளை நடத்த அரசாங்கத்தை அனுமதிக்குமாறு ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் அழைப்பு விட வேண்டும் எனக் கோரியும், எந்த விதத்திலுமான உள்ளக விசாரணைகளை ஏற்றுக்கொள்வதில்லை என்பதனை தெளிவுபடுத்தியும், சர்வதேச குற்றவியல் விசாரணை ஒன்றைக் கோரியும் தமிழ் சிவில் சமூக அமையம் இந்தக் கையெழுத்துப் பிரச்சாரத்தை நேற்று ஆரம்பித்திருக்கின்றது.
இதன் பொருட்டு இலங்கைத் தீவு வாழ் தமிழர்களின் கையெழுத்துகள் பெருமளவில் திரட்டப்பட்டு ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக