18

siruppiddy

மார்ச் 18, 2015

பழைய தேர்தல் முறைமையிலேயே புதிய தேர்தல் முறைமை

19ம் அரசியல் திருத்தச் சட்டத்துடன், புதிய தேர்தல் முறைமையையும் நாடாளுமன்றத்தில் முன்வைக்க சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஆனால் பழைய தேர்தல் முறையின் கீழேயே தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தேர்தல் முறைமையை அமுலாக்குமாறு பல்வேறுத் தரப்புக்களினால் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
எனினும் புதிய தேர்தல் முறை அமுலாக்கப்பட்டால் 3 மாதங்களுக்கு தேர்தல் நடத்த முடியாது என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்து நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தல் பழைய முறையிலேயே நடத்தவும், ஆனால் புதிய தேர்தல் முறைமைக்கு நாடாளுமன்ற அங்கீகாரத்தை பெற்றுக்
 கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக